Categories: இந்தியா

12ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரலை.. ஒடிசா அரசு அதிரடி முடிவு!

Published by
பாலா கலியமூர்த்தி

ஒடிசா மாநிலத்தில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் முறைகேடு நடப்பதை தடுக்க, தேர்வை நேரலை செய்ய அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது. அதாவது, தேர்வு முறைகேடுகளைத் தடுக்கும் வகையில், நடப்பு ஆண்டில் உயர்நிலைக் கல்வி கவுன்சிலின் (CHSE) 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நேரடியாக ஒளிபரப்ப செய்ய ஒடிசா மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஏற்கனவே, தேர்வு அறையில் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கப்பட்டு வரும் நிலையில், வெப்காஸ்ட் மூலம் நேரலை செய்யப்பட உள்ளது. வருடாந்திர தேர்வுகளை நடத்துவதைக் கருத்தில் கொண்டு, 2024ல் வெளிப்படையான முறையில், உயர்நிலைக் கல்வி (CHSE) தேர்வு நடத்தப்பட உள்ளது.

இதன்மூலம் அனைத்து மேல்நிலைப் பள்ளிகளின் ஸ்ட்ராங் ரூம் (EMHs), மைய கண்காணிப்பாளர் அலுவலகம், தேர்வு அறைகள் மற்றும் அனைத்து ஆய்வகங்கள் ஆகியவற்றின் செயல்பாடுகளை பதிவு செய்வது கட்டாயமாகும்.

5 மாநிலங்களில் ஆட்சி யாருக்கு..? வெளியான கருத்துக் கணிப்பு முடிவுகள்..!

இது தவிர, CHSE, பள்ளி மற்றும் கல்வித் துறை, சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ஆகியவற்றில் உள்ள அதிகாரிகள் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்து, இந்த நிகழ்வுகள் அனைத்தையும் நேரலையில் ஒளிபரப்ப வேண்டும்.

மேலும், தேர்வு அறை, ஸ்ட்ராங் ரூம், ஆய்வகங்களில் CCTV (நிறுவப்படாவிட்டால்) பொருத்துமாறு உயர்நிலைப் பள்ளி அதிகாரிகளுக்கு CHSE உத்தரவிட்டுள்ளது. கேமரா சோதனை செய்யப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும்.

ஒடிசா மாநிலத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு மாநிலம் முழுவதும் 1,000க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் நடத்தப்படும் என்றும், இதில் 3.70 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதுவார்கள் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

அந்த விதியை முதல்ல எடுங்க..வேண்டுகோள் வைத்த வீரர்கள்..நடவடிக்கை எடுக்குமா பிசிசிஐ?

துபாய் : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 22-ஆம் தேதி பிரமாண்டமாக தொடங்கப்படவுள்ளது. முதல் போட்டியானது நடப்பு சாம்பியன்…

10 minutes ago

அனுமதி தானே கேட்டேன் நான் செய்தது தவறா? – ஆவேசமான வேல்முருகன்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் (தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர்)…

44 minutes ago

“வேல்முருகன் அதிகப்பிரசங்கி தனமாக நடந்து கொள்கிறார்!” கடுப்பான முதலமைச்சர்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்…

2 hours ago

தவெக பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரம்.., ஒன்றாக களமிறங்கிய ஆதவ், ஆனந்த்!

சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார…

2 hours ago

வீரப்பன் மகளுக்கு நாதக-வில் முக்கிய பொறுப்பு! காளியம்மாள் இடத்திற்கும் புதிய நபர் நியமனம்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை…

3 hours ago

“அதிமுகவினருக்கு தைரியம் இருக்கா?” சவால் விட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…

3 hours ago