இரு நாடுகளுக்கிடையில் நடந்து வரும் இராணுவ நிலைப்பாட்டை குறைக்க இந்தியாவும், சீனாவும் கிழக்கு லடாக்கில் அக்டோபர் 12-ம் தேதி ஏழாவது கமாண்டர்-லெவல் பேச்சுவார்த்தையை நடத்தவுள்ளன.
செப்டம்பர் 21-ம் தேதி அன்று இரு தரப்பினரும் கடைசியாக பேச்சுவார்த்தைகளை நடத்தினர். இதில் அனைத்து புள்ளிகளிலும் விரிவான பணிநீக்கம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டது. பின்னர், செப்டம்பர் 22-ம் தேதி அன்று இந்தியா மற்றும் சீனா வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில், இரு தரப்பினரும் அதிக வீரர்களை அனுப்புவதை நிறுத்தவும், ஏழாவது சுற்று தளபதி மட்ட பேச்சுவார்த்தைகளை நடத்தவும் ஒப்புக் கொண்டதாகக் கூறியது.
மேலும், சரியான முறையில் நடைமுறை நடவடிக்கைகளை எடுக்கவும், சிக்கல்களைத் தீர்ப்பதுடன், எல்லைப் பகுதியில் அமைதியை கூட்டாகப்பாதுகாக்க வேண்டும் என கூறப்பட்டது. லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங் மற்றும் லெப்டினன்ட் ஜெனரல் பி.ஜி.கே மேனன் ஆகியோர் ஆறாவது பேச்சுவார்த்தையில் பங்கேற்றனர்.
அடுத்த மாதம் தனது பதவிக் காலத்தை லெப்டினன்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங்நிறைவு செய்யவுள்ள நிலையில், சிங்கிற்கு பதிலாக லேவை தளமாகக் கொண்ட 14 கார்ப்ஸின் தளபதியாக மேனன் நியமிக்க உள்ளார்.
எல்லை பதட்டங்களைக் குறைக்க சீனாவுடன் இராணுவப் பேச்சுவார்த்தைக்கு சிங் தலைமை தாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழகத்தில் சமீபகாலமாக பல்வேறு இடங்களில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக எதிர்க்கட்சி…
சென்னை : முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. 2025-26 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட வேண்டிய…
நாகர்கர்னூல் : தெலுங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீசைலம் இடது கரை கால்வாய் (SLBC) சுரங்கப்பாதையில் கடந்த சனிக்கிழமை காலை…
வங்கதேசம் : வங்காள விரிகுடாவில் இன்று அதிகாலை 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம்…
துபாய் : வங்கதேச அணிக்கு எதிராக நேற்றைய தினம் நடந்த போட்டியில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றதன் மூலம் அரையிறுதி…
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…