நியூட்ரினோ ஆய்வக விவகாரம்: உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல்…!

Default Image

நியூட்ரினோ ஆய்வக விவகாரத்தில்  உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள பொட்டிபுரம் மலை பகுதியில் நியூட்ரினோ ஆய்வு மையத்தை செயல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகமும் அனுமதி வழங்கி உள்ள நிலையில் இந்த திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்தக்கூடாது. இதனால் சுற்றுச்சூழல் பெரிதும் பாதிக்கப்படும் என பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன.
Image result for நியூட்ரினோ
 
இந்நிலையில் நியூட்ரினோஆய்வக விவகாரத்தில் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நியூட்ரினோ ஆய்வகத்துக்கான மத்திய சுற்றுச்சூழல்துறை அமைச்சக அனுமதிக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.அனுமதிக்கு தடைவிதிக்க பசுமை தீர்ப்பாயம் மறுப்பு தெரிவித்ததற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்