கொரோனா தடுப்பூசி;கால அவகாசம் 2 மாதங்களாக குறைவா?..!

Published by
Edison

உலகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.அந்த வகையில்,கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்படுகின்றன.இதனால், கொரோனா பரவல் சற்று குறைந்து இருந்தது.

கொரோனா மீண்டும் அதிகரிப்பு:

ஆனால்,தற்போது தென் கொரியா,சீனா மற்றும் இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.எனவே தடுப்பூசி செலுத்தும் பணியை இந்தியாவில் மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகின்றது.

கால அவகாசம் குறைவு?:

இந்நிலையில்,கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது தவணை செலுத்திக் கொள்வதற்கான கால அவகாசம் 3 மாதங்களிலிருந்து 2 மாதங்களாக குறைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வல்லுநர் குழு பரிந்துரை:

முன்னதாக,கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திய பிறகு,இரண்டாவது தவணை செலுத்துவதற்கான கால அவகாசம் 12 – 16 வாரங்களாக உள்ள நிலையில்,அதனை 8 -12 வாரங்களாக குறைக்க மத்திய அரசுக்கு, வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.

மேலும்,ஒமைக்ரானை தடுப்பதில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முக்கிய பங்கு வகிப்பதால் அதனையும் விரிவுப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு! 

“நாங்கள் போரை நிறுத்த விரும்புகிறோம்! ஆனால்?” உக்ரைன் அதிபர் பகிரங்க அறிவிப்பு!

கீவ் : உக்ரைன் - ரஷ்யா போரானது நீண்ட மாதங்களாக நடைபெற்று வருகிறது. அமெரிக்க ராணுவ உதவியுடன் உக்ரைன், போரை…

9 hours ago

முடங்கிய எக்ஸ் (டிவிட்டர்)! பயனர்கள் கடும் அவதி!

சான் பிராசிஸ்கோ : உலகளாவிய பிரபல சமூக வலைதளமான எக்ஸ் (டிவிட்டர்) கடந்த சில மணிநேரங்களுக்கு முன்னர் தொழில்நுட்ப கோளாறு…

9 hours ago

திருமா வருத்தம்.! “திமுகவின் சாயம் வெளுக்கிறது” த.வெ.க நேரடி விமர்சனம்!

சென்னை : மதுரை மாவட்டத்தில் நடைபெற்ற மதநல்லிணக்க நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன்,…

11 hours ago

துப்பாக்கி முனையில் ‘பட்டப்பகல்’ நகை கொள்ளை! சுட்டுப்பிடித்த பீகார் போலீசார்!

பீகார் : இன்று  பட்டப்பகலில் பீகார் மாநிலம் போஜ்பூர் மாவட்டத்தில் உள்ள அர்ரா பகுதி காவல் நிலைய எல்லைக்கு உட்பட…

12 hours ago

“பதட்டத்தில் பிதற்றும் முதலமைச்சருக்கு 3 கேள்விகள்” – மீண்டும் சர்ச்சையை கிளப்பிய அண்ணாமலை.!

சென்னை : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மும்மொழிக் கொள்கை குறித்த விவாதத்தில் பேசிய மத்திய கல்வியமைச்சர்  தர்மேந்திர பிரதான், திமுக…

12 hours ago

“நான் வேஷம் போடுவதில்லை., விஜயை விமர்சிக்க வேண்டியதில்லை.,” சீமான் ‘சாஃப்ட்’ பேட்டி!

கோவை : கடந்த மார்ச் 7ஆம் தேதியன்று இஸ்லாமியர்கள் விழாவான  ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது. இதில் சென்னை…

13 hours ago