கொரோனா தடுப்பூசி;கால அவகாசம் 2 மாதங்களாக குறைவா?..!

Default Image

உலகம் முழுவதும் கொரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில் கொரோனா வைரஸை கட்டப்படுத்தும் முயற்சியில் உலக நாடுகள் ஈடுபட்டு வருகின்றன.அந்த வகையில்,கொரோனா தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு மக்களுக்கு செலுத்தப்படுகின்றன.இதனால், கொரோனா பரவல் சற்று குறைந்து இருந்தது.

கொரோனா மீண்டும் அதிகரிப்பு:

ஆனால்,தற்போது தென் கொரியா,சீனா மற்றும் இந்தியாவின் சில மாநிலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.எனவே தடுப்பூசி செலுத்தும் பணியை இந்தியாவில் மத்திய அரசு தீவிரப்படுத்தி வருகின்றது.

கால அவகாசம் குறைவு?:

இந்நிலையில்,கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியின் இரண்டாவது தவணை செலுத்திக் கொள்வதற்கான கால அவகாசம் 3 மாதங்களிலிருந்து 2 மாதங்களாக குறைக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

வல்லுநர் குழு பரிந்துரை:

முன்னதாக,கோவிஷீல்டு தடுப்பூசியின் முதல் தவணையை செலுத்திய பிறகு,இரண்டாவது தவணை செலுத்துவதற்கான கால அவகாசம் 12 – 16 வாரங்களாக உள்ள நிலையில்,அதனை 8 -12 வாரங்களாக குறைக்க மத்திய அரசுக்கு, வல்லுநர் குழு பரிந்துரை செய்துள்ளது.

மேலும்,ஒமைக்ரானை தடுப்பதில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முக்கிய பங்கு வகிப்பதால் அதனையும் விரிவுப்படுத்த மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்