குடியுரிமை சட்ட விவகாரம்… டெல்லி கலவரத்தில் ஈடுபட்ட 2,193 பேர் கைது செய்து அதிரடி காட்டிய டெல்லி காவல்துறை…

Default Image

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியாவிற்க்கு சுற்றுப்பயணம் செய்தார். அப்போது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிராகவும், ஆதரவாகவும் டெல்லியில்  நடைபெற்ற போராட்டங்கள் கலவரமாக மாறியது. இதில், வடகிழக்கு டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்பாளர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் இடையே கடந்த மாதம் ஏற்பட்ட மோதல் கலவரமாக மாறியது. இந்த கலவரத்தில் 53 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த கலவரம் தொடர்பாக, டெல்லி  காவல்துறை  சிறப்புப் புலனாய்வுக் குழுக்களை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், இந்த மோதல் கலவரம் தொடர்பாக இதுவரை 2,193 பேர் கைது  செய்யப்பட்டுள்ளதாகவும், 690 வழக்குகள் பதிவு  செய்யப்பட்டுள்ளதாகவும் டெல்லி காவல்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்