சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல் என்னும் திருக்குறளை மேற்கோள் காட்டி பிரதமர் மோடி அவர்கள் உரையாற்றியுள்ளார்.
இன்று உலகம் முழுவதிலும் ஏழாவது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தலைநகர் டெல்லியில் நடக்கும் சர்வதேச யோகா தின கொண்டாட்டம் காலை 6 மணிக்கு தூர்தர்ஷன் டிவி சேனல்களில் ஒளிபரப்பப்பட்டு வருகிறது. மேலும், ஆரோக்கியத்திற்கான யோகா எனும் தலைப்பில் இந்த ஆண்டு யோகா தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையடுத்து பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று காலை சிறப்புரையாற்றியுள்ளார்.
அப்போது பேசிய அவர், “நோய்நாடி நோய் முதல்நாடி அதுதணிக்கும் வாய்நாடி வாய்ப்பச் செயல்” எனும் திருக்குறளை மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார். மேலும் உலக மக்கள் அனைவரும் நலமுடன் வாழ விரும்புவதாகவும், ஒவ்வொரு நாடும் ஒவ்வொரு நாட்டு மக்களும் ஆரோக்கியமாக இருக்க பிரார்த்திக்கிறேன் எனவும் இந்த கொரோனா பரவும் காலத்தில் யோகா நம்பிக்கை ஒளியாக திகழ்வதாகவும் கூறியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…