இனி WhatsApp மூலம் PF புகார்களை தெரிவிக்கலாம்..!

Published by
murugan

பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஒ) வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. சந்தாதாரர்களின் புகார்களை விரைவாக தீர்க்கும் நோக்கத்துடன் இந்த சேவை கொண்டு வரப்பட்டதாக தொழிலாளர் அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

EPFO ஏற்கனவே EPF IGMS போர்ட்டல், CPGRAMS, சமூக ஊடக தளங்களான (பேஸ்புக் மற்றும் ட்விட்டர்) மற்றும் 24 மணி நேர கால் சென்டர் ஆகியவை மூலம் குறைகளை நிவர்த்தி செய்து வருகிறது.   EPFO இன் 138 பிராந்திய அலுவலகங்களிலும் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியின் மூலம், பி.எஃப் பங்குதாரர்கள் தனிப்பட்ட EPFOவின் பிராந்திய அலுவலகங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளலாம்.

கொரோனாவின் போது உறுப்பினர்களுக்கு தடையற்ற சேவைகளை வழங்குவதே இதன் நோக்கம் என்று தொழிலாளர் அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. புகார்களை உடனடியாக தீர்ப்பதை உறுதி செய்வதற்கும், வாட்ஸ்அப்பில் கேட்கப்படும் கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கும், ஒவ்வொரு பிராந்திய அலுவலகத்திலும் ஒரு தனி நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இதுவரை 1,64,040 க்கும் மேற்பட்ட புகார்கள் மற்றும் கேள்விகளை வாட்ஸ்அப் மூலம்  EPFO தீர்த்துள்ளது. அனைத்து பிராந்திய அலுவலகங்களின் வாட்ஸ்அப் ஹெல்ப்லைன் எண்கள் EPFO ​​இன் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கின்றன.

Published by
murugan
Tags: EPFOWhatsApp

Recent Posts

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

”அடிதடி, ரத்தம் எதுவும் என்ன விட்டு போகல”…, கவனம் ஈர்க்கும் ‘ரெட்ரோ’ டிரைலர்.!

சென்னை : சூர்யா, கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவாகியிருக்கும் 'ரெட்ரோ' படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டிருக்கிறது. இரண்டு மாதங்களுக்கு முன்பு…

2 hours ago

RCB vs PBKS : குறுக்கே வந்த கௌசிக்.., மழை காரணமாக டாஸ் தாமதம்.!

பெங்களூரு : பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் பெங்களூர் - பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான போட்டி இன்று நடைபெறவிருக்கிறது. இரு அணிகளும்…

3 hours ago

என்னது..!! செல்பாேன் கட்டணம் மீண்டும் உயர்வா.? ஜியோ, ஏர்டெல் பயனர்களுக்கு அதிர்ச்சி.!

டெல்லி : செல்போன் கட்டணத்தை கடந்தாண்டு ஜியோ, ஏர்டெல், வோடாபோன் ஐடியா ஆகியவை உயர்த்தின. பிஎஸ்என்எல் மட்டும் உயர்த்தவில்லை. இந்நிலையில்,…

3 hours ago

”வென்றால் மாலை.., இல்லை என்றால் பாடை” – சீமானின் பரபரப்பு பேச்சு.!

சென்னை : NDA கூட்டணிக்கு நாதக-வை, நயினார் நாகேந்திரன் அழைத்திருந்த நிலையில், அதற்கு சீமான் நன்றி தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று…

4 hours ago

க்ரீன் சிக்னல் கொடுத்த அர்ஜுன்.., 13 வருட வெளிநாட்டு காதலனை மணக்க போகும் அஞ்சனா.!

சென்னை : நடிகர் அர்ஜுனின் இளைய மகள் அஞ்சனா கடந்த 2023-ஆம் ஆண்டு ஹேண்ட் பேக் தயாரிக்கும் நிறுவனம் ஒன்றை…

4 hours ago

சென்னை அணிக்காக களமிறங்கிய ‘பேபி ஏபி’.! CSK-வில் பிரெவிஸ் இணைந்த காரணம் என்ன?

சென்னை : தென்னாப்பிரிக்காவின் இளம் அதிரடி வீரரான டிவால்ட் பிரேவிஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்துள்ளார். சென்னை சூப்பர்…

5 hours ago