வரும் ஜூலை 26-ம் தேதி மருத்துவ படிப்புகளுக்கான NEET தேர்வு நடைபெறும் என மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்தார்.
இந்தியாவில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் தற்போது வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி, கல்வி நிறுவனங்கள் அனைத்து மூடப்பட்டது. ஊரடங்கு தொடந்து நீடிக்கப்பட்டு கொண்டே செல்வதால் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடைபெற வேண்டிய தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் சில நுழைவு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, மாணவர்கள் மத்தியில் தேர்வுகள் நடைபெறுமா..? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், மே மாதம் மருத்துவ படிப்புகளுக்கான NEET நுழைவுத்தேர்வு நடப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் காரணமாக தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, மருத்துவ படிப்புகளுக்கான NEET நுழைவுத்தேர்வு குறித்த அறிவிப்பை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்தார். அதில், வரும் ஜூலை 26-ம் தேதி மருத்துவ படிப்புகளுக்கான NEET தேர்வு நடைபெறும் என அறிவித்தார். மேலும் JEE முதன்மைத் தேர்வுகள் ஜூலை 18 முதல் 23 வரை நடைபெறும் என அறிவித்தார்.
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. இன்று சவரனுக்கு ரூ.520…