#BREAKING: ராஜஸ்தானில் அடுத்த அதிரடி.! சச்சின் பைலட் உள்ளிட்ட 19 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் .!

Default Image

காங்கிரஸ் சட்டமன்றக் கட்சி கூட்டங்களில் கலந்து கொள்ளாததற்காக சச்சின் பைலட் மற்றும் 18 எம்.எல்.ஏக்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட் மற்றும் 18 எம்.எல்.ஏக்களுக்கு சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியதாக ராஜஸ்தான் காங்கிரஸ் பொறுப்பாளர் அவினாஷ் பாண்டே தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது  குறித்து விளக்கமளிக்க சபாநாயகர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இவர்கள் 2 நாளில் விளக்கம் கொடுக்கவில்லை என்றால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்ததாக கருதப்படும் என அவர் கூறினார்.

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய  சச்சின் பைலட்  நேற்று காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும், அம்மாநிலத்தின் துணை முதல்வர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்