கொரோனாவால் கடந்த ஒரு மாதத்தில் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருபவர்களில் நாட்டிலேயே குறைந்த எண்ணிக்கையில் உள்ளது ராஜஸ்தான் மாநிலம். தற்போது இங்கு 81 பேர் நோய்த்தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில் கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை. இந்த கொரோனா தொற்று மீண்டும் ஏற்படலாம். அதனால் அனைவரும் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளான முகக்கவசம் அணிவது, தனி மனித இடைவெளியை பின்பற்றுவது போன்ற தடுப்பு நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும்.
தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி 4.55 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. மேலும், இதில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களின் எண்ணிக்கை 1.10 கோடிக்கும் அதிகமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…