Categories: இந்தியா

குஜராத் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனு… வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று தாக்கல்.!

Published by
Muthu Kumar

வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், குஜராத் ராஜ்யசபா தேர்தலுக்கான வேட்புமனுவை இன்று தாக்கல் செய்தார்.

குஜராத்தில் இருந்து ராஜ்யசபா உறுப்பினர்களுக்கான தேர்தல் வரும் ஜூலை 24 ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், முதல்வர் பூபேந்திர படேல் மற்றும் பாஜக குஜராத் பிரிவு தலைவர் சி.ஆர்.பாட்டீல் ஆகியோருடன் இன்று தேர்தல் அதிகாரி ரீட்டா மேத்தாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தார்.

வேட்புமனு தாக்கல் செய்ய ஜூலை 13 கடைசி தேதியும், வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஜூலை 17ம் தேதியும், ஒருவேளை தேவைப்பட்டால் வாக்குப்பதிவு ஜூலை 24இல் நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் உள்ள 11 ராஜ்யசபா தொகுதிகளில், தற்போது 8 தொகுதிகள் பாஜக வசமும் மற்ற 3 தொகுதிகள் காங்கிரஸ் வசமும் உள்ளது.

பாஜக வசம் உள்ள எட்டு இடங்களில், எஸ் ஜெய்சங்கர், ஜுகல்ஜி தாக்கூர் மற்றும் தினேஷ் அனவாடியா ஆகியோரின் பதவிக்காலம் ஆகஸ்ட் 18-ம் தேதியுடன் முடிவடைகிற நிலையில், தற்போது இந்த மூன்று தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஜூலை 24 ஆம் தேதி நடைபெறுகிறது.

Published by
Muthu Kumar

Recent Posts

இபிஎஸ் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல்! மோப்பநாய் உதவியுடன் தேடுதல் வேட்டை தீவிரம்…

சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் இன்று அதிமுக மாவட்ட செயலாளர் ஆலோசனை கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…

47 minutes ago

“ஆமாம்., நாங்கள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளித்தோம்!” பாகிஸ்தான் அமைச்சர் பரபரப்பு பேட்டி!

இஸ்லாமாபாத் : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…

1 hour ago

பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!

டெல்லி : கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் 2 (PS2) இல் இடம்பெற்ற…

1 hour ago

வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை தொடர்பான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது.…

2 hours ago

“பல்கலைக்கழக துணைவேந்தர்கள் நள்ளிரவில் மிரட்டப்பட்டுள்ளனர்” – ஆளுநர் ஆர்.என்.ரவி.!

உதகை : ஊட்டி ராஜ்பவன் மாளிகையில் இன்று (ஏப்.25) காலை துணைவேந்தர்கள் மாநாடு தொடங்கியது. மாநாட்டை குடியரசு துணைத் தலைவர்…

3 hours ago

“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!

கொச்சி: நாட்டையே உலுக்கிய கடந்த செவ்வாய்க்கிழமை ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த கொடிய தீவிரவாத தாக்குதலில் தனது தந்தையை இழந்த கொச்சியைச்…

4 hours ago