மொபைல் போனில் வீடியோகேம் விளையாடுவதை நிறுத்துமாறு பெற்றோர்கூறியதைத் தொடர்ந்து, 15 வயது சிறுவன் புதியதாக கட்டும் கட்டிடத்தில் இருந்து குதித்ததாகக் கூறப்படுகிறது.
நொய்டாவில், செக்டர் 110 என்ற பகுதியில் வசிக்கும் ஒரு பெற்றோர் தங்களது 7 ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவனை வீடியோ கேம் விளையாடுவதை நிறுத்தச் சொல்லிக் கண்டித்ததால், அச்சிறுவன் கடந்த வியாழன்கிழமை தனது வீட்டை விட்டு வெளியேறினான். ஆனால் திரும்ப வரவில்லை, இதனால் பதற்றமடைந்த அவனது பெற்றோர் அங்கும் இங்கும் தேடினர். எனினும் அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கிடையில் அச்சிறுவனின் உடலை நேற்று முன்தினம் புதியதாக கட்டும் ஒரு கட்டிடத்தின் அருகில் போலீசார் கண்டெடுத்துள்ளனர்.
மேலும் சிறுவனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, இது குறித்து விசாரணை நடத்தப்படுகிறது,” என்று போலீசார் வியாழக்கிழமை தெரிவித்தனர். இதுகுறித்து, கூடுதல் போலீஸ் துணை ஆணையர் (குற்றப்பிரிவு) எலமரன் ஜி கூறுகையில், “காணாமல்போன சிறுவனின் உடல் அருகிலுள்ள கட்டிடத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவு அந்த சிறுவன் கட்டிடத்திலிருந்து குதித்திருக்கலாம் என்று தெரிய வருகிறது. எனவே அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு, இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்திலிருந்து ஆதாரங்களை சேகரித்துள்ளனர்” என்று கூறினார்.
சென்னை : மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளிலிருந்து தென்தமிழகம் வரை ஒரு வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, தமிழ்நாட்டில்…
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…