கொரோனா காரணமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ரத்து

Default Image

கொரோனா வைரஸ் காரணமாக இந்த முறை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறாது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதத்தில் நடத்தப்படுவது வழக்கமாகும்.ஆனால் கொரோனா காரணமாக இந்த ஆண்டு இதுவரை குளிர்கால கூட்டத் தொடர் நடத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருந்தது.

இதனிடையே வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராடி வரும் நிலையில்,இது குறித்து விவாதிக்க நாடாளுமன்றை கூட்ட வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரி நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஜோஷிக்கு கடிதம் எழுதினார்.

இதற்கு பதில் அளிக்கும் வகையில் ,நாடாளுமன்ற விவகார அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி  காங்கிரஸ் எம்.பி. அதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு  எழுதிய கடிதத்தில், அனைத்து அரசியல் கட்சிகளும் கொரோனா பரவலை  தவிர்ப்பதற்காக கூட்டத்தொடரை  ரத்து செய்வதையும், ஜனவரி மாதம் பட்ஜெட் கூட்டத்தொடரை கூட்டலாம் என   விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்