Categories: இந்தியா

எந்த மதமும் தீவிரவாதத்தை பரப்புவது இல்லை.. மதவெறியர்கள் தான் இதற்கு காரணம்.! கேரள உயர்நீதிமன்றம் அதிரடி கருத்து.!

Published by
மணிகண்டன்

எந்த ஒரு மதமும் தீவிரவாதத்தையோ, வெறுப்புணர்வையோ யாரிடமும் பரப்புவது இல்லை. மத வெறியர்கள் தான் இந்த கருத்துகளை தவறாக சித்தரித்து மக்களிடம் கூறி வருகின்றனர். – கேரள உயர்நீதிமன்றம் கருத்து. 

கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் குற்றம் சாட்டப்பட்ட மூவரும் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பில் சேர்ந்து பணியாற்ற  சட்ட விரோதமாக சிரியா செல்ல முயற்சித்தனர். அப்போது துருக்கி அதிகாரிகளால் எல்லை பகுதியில் தடுத்து நிறுத்தப்பட்டனர். அவர்கள் கேரளாவை சேர்ந்த இந்தியர்கள் என்பதால் இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டனர். அவர்கள் கேரளாவில் இருந்து கொண்டு பல இளைஞர்களை ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்புடன் பணியாற்றுவதற்கு ஊக்குவிக்கும் வகையில் செயல்பட்டதாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அதற்கான ஆதாரங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

சிறை தண்டனை : இதனை தொடர்ந்து சம்பந்தப்பட்ட மூவரில் இருவருக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறைதண்டனையும், மூன்றாவது நபருக்கு 6 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிர்த்தும் , சம்பந்தப்பட்டவர்களுக்கு ஜாமீன் கோரியும் கேரளா உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது.

மேல்முறையீடு : இந்த மேல்முறையீட்டு மனுவில், அவர்கள் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் எனவும், அவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் எனவும், மனுவில் கோரப்பட்டு இருந்தது. இந்த வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு எந்த மதமும் தீவிரவாதத்தை பரப்புவது இல்லை என குறிப்பிட்டு பேசியுள்ளனர்.

மத வெறியர்கள்  : மேலும் அவர்கள் கூறுகையில், பயங்கரவாதம் என்பது மக்களின் வாழ்க்கையையும் சுதந்திரத்தையும் பாதிக்கும் ஒரு தீமை. இது தேசத்தின் வளர்ச்சியை பாதிக்கிறது. எந்த ஒரு மதமும் தீவிரவாதத்தையோ, வெறுப்புணர்வையோ யாரிடமும் பரப்புவது இல்லை. மத வெறியர்கள் தான் இந்த கருத்துகளை தவறாக சித்தரித்து மக்களிடம் கூறி வருகின்றனர் என தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

ஜாமீன் : குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஆதரவாக வாதிட்ட வழக்கறிஞர், தண்டனை காலமான ஏழு ஆண்டுகளில் 5 ஆண்டுகள் ஏற்கனவே முடிந்துவிட்டன. மீதம் 2 ஆண்டுகள் மட்டுமே இருக்கின்றன. இந்த ஐந்து ஆண்டுகளிலும் அவர்கள் ஜாமின் கேட்கவில்லை. எனவே அவர்களுக்கு ஜாமீன் வழங்குமாறு வாதிட்டார். மேலும் தண்டனை காலம் முடியும் வரை எந்தவித அசம்பாவிதமும் நடைபெற வில்லை எனவும், நல்ல முறையில் சிறை தண்டனையை கழித்தால் அவர்களின் தண்டனையை குறைக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.

NIA மறுப்பு : இந்த வழக்கு விசாரணையில் கருத்து தெரிவித்த, தேசிய புலனாய்வு அமைப்பான NIA அதிகாரிகள், அவர்கள் ஜாமினில் விடுவிக்கப்பட்டால், சம்பந்தப்பட்டவர்கள் தலைமறைவாகவும், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடவும் எல்லா வாய்ப்புகளும் உள்ளன. எனவே, அவர்களுக்கு ஜாமீன் வழங்க கூடாது என NIA அதிகாரிகள் குறிப்பிட்டனர். இந்த வாதங்களை குறித்து கொண்டு தற்போது இந்த வழக்கானது கேரள உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Published by
மணிகண்டன்

Recent Posts

WWT20 : கியானா ஜோசப் அதிரடி ..! ஸ்காட்லாந்தை எளிதில் வென்று வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி அபாரம்..!

துபாய் : டி20 மகளிர் கோப்பைத் தொடரில் இன்று நடைபெற்ற 8-வது போட்டி துபாயில் உள்ள சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

6 hours ago

கோலாகலமாக தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8! போட்டியாளர்கள் யாரெல்லாம் தெரியுமா?

சென்னை : பிக் பாஸ் தமிழ் சீசன் நிகழ்ச்சி எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில், தற்போது…

6 hours ago

IND vs BAN : வங்கதேசத்தை வென்ற இளம் இந்தியப் படை! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

குவாலியர் : வங்கதேச அணி, இந்தியாவில் மேற்கொண்டு வரும் சுற்று பயணத்தில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2-0 என…

7 hours ago

கைகொடுத்த நிதான பேட்டிங்..! பாகிஸ்தானை வீழ்த்திய இந்திய மகளிர் அணிக்கு முதல் வெற்றி..!

துபாய் : நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை தொடரின் இன்றைய 7-வது போட்டியில் இந்திய மகளிர் அணியும், பாகிஸ்தான் மகளிர்…

10 hours ago

வங்கதேச அணியை பொட்டலம் செய்த இங்கிலாந்து மகளிர் அணி! தொடரின் முதல் வெற்றியைப் பெற்று அசத்தல்!

ஷார்ஜா : நடைபெற்று வரும் டி20 உலககோப்பைத் தொடரின் இன்றைய போட்டியில் வங்கதேச மகளிர் அணியும், இங்கிலாந்து மகளிர் அணியும்…

1 day ago

கெத்து காட்டிய பெத் மூனி ..! 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்திய ஆஸ்திரேலிய மகளிர் அணி!

ஷார்ஜா : நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக்கோப்பைத் தொடரின் 5-வது போட்டியான இன்று  ஆஸ்திரேலிய மகளிர் அணியும், இலங்கை…

1 day ago