65 வயதுக்கு மேற்பட்ட மேற்பட்டவர்கள் தபால் ஓட்டு போடுவதற்கான வசதியை நீட்டிக்க போவதில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் நாடு முழுவதும் அதிகமாக பரவி வருகிறது. இந்நிலையில், தற்போது பீகாரில் நிதிஷ் குமார் தலைமையில் ஆட்சி வருகின்ற நவம்பர் மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், 243 தொகுதியில் அக்டோபரில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் என கூறப்படுகிறது.
சமீபத்தில், பீகார் உள்ளிட்ட இனிவரும் தேர்தல்களில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் வாக்களிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இந்த அறிவிப்பு பலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தன. இந்நிலையில், பீகார் தேர்தல் மற்றும் வரவிருக்கும் பிற இடைத்தேர்தல்களிலும், 65 வயதுக்கு மேற்பட்ட மேற்பட்டவர்கள் தபால் ஓட்டு போடுவதற்கான வசதியை நீட்டிக்க போவதில்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
பீகாரில் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் அதிகபட்சமாக 1,000 பேர் தான் வாக்களிக்கலாம். பீகாரில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட இருக்கின்றன. 80 வயதுக்கு மேற்பட்ட மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், அத்தியாவசிய சேவை பணியில் ஈடுபடுபவர்கள் மற்றும் கொரோனா பாதித்து வீடு மற்றும் பிற அமைப்புகளில் தனிமைப் படுத்தப்பட்டவர்கள் தபால் வாக்கு செலுத்தலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்டவர்களும் தபால் ஓட்டு மூலம் வாக்களிக்க முடியும் என தேர்தல் விதிகளில் திருத்தம் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…