‘இடம் இல்லை’ – 11 நாட்கள் மரத்தில் தனிமைப்படுத்திக் கொண்ட கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இளைஞன்….!

Published by
லீனா

தெலுங்கானாவில் நல்கொண்டா கிராமத்தை சேர்ந்த, சிவா என்ற 18 வயது இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மரத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். 

தெலுங்கானாவில் நல்கொண்டா கிராமத்தை சேர்ந்த, சிவா என்ற 18 வயது இளைஞனுக்கு மே 4-ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, இவர் தனது குடும்பத்திற்கு கொரோனா பரவுவதை தடுப்பதற்காக 11 நாட்கள் மரத்திலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். இவர் தனது வீட்டின் வளாகத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளைகளில், மூங்கில் குச்சிகளை கொண்டு ஒரு படுக்கையை கட்டி எழுப்பினார். அதில், அவர் 11 நாட்கள் அந்த மரத்தில் செலவிட்டுள்ளார்.

சிவா குடும்பத்தில் மொத்தம் நான்கு பேர் உள்ளனர். தனக்கு பாதித்த கொரோனா , தனது குடும்பத்தில் யாரையும் பாதித்து விடக்கூடாது என்பதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இங்கு தனிமைப்படுத்தும் மையமில்ல. 2 நாட்களுக்கு முன்புதான் எஸ்.டி ஹாஸ்டலை ஒரு தனிமைப்படுத்தும் மையமாக மாற்றியுள்ளனர். அதுவரை எங்களிடம் எந்த தனிமைப்படுத்தும் மையமும் இல்லை. மற்ற கிராமங்களில் இதுபோன்ற மையங்கள் ஏதேனும் இருக்கிறதா என்று எனக்கு தெரியாது. அதனால் தான் நான் என்னை இப்படி தனிமைப் படுத்திக் கொண்டேன். எனக்கு உதவ என் கிராமத்தில் யாரும் முன்வரவில்லை. அவர்கள் அனைவரும் வைரஸைப் பற்றி பயப்படுகிறார்கள். யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை எனக் கூறியுள்ளார்.

சிவா பெரும்பகுதியான நேரத்தில் போனை பயன்படுத்துகிறார். மேலும், அவரது குடும்பத்தினர், சிவாவிற்கு, கயிறு மற்றும் ஒரு வாளியை பயன்படுத்தி அவரது உணவுகளை கொடுக்கின்றனர். மேலும் பலர் அந்த கிராமத்தில் தனிமைப்படுத்தி உள்ள நிலையில் சிலர் குளியலறையிலும், சிலர் வயல்களிலும், மற்றவர்கள் சாக்குகளை கொண்டு தற்காலிக குடிசைகள் அமைத்து தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர்.

Published by
லீனா

Recent Posts

“வேல்முருகன் அதிகப்பிரசங்கி தனமாக நடந்து கொள்கிறார்!” கடுப்பான முதலமைச்சர்!

“வேல்முருகன் அதிகப்பிரசங்கி தனமாக நடந்து கொள்கிறார்!” கடுப்பான முதலமைச்சர்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள்…

43 minutes ago

தவெக பொதுக்குழு ஏற்பாடுகள் தீவிரம்.., ஒன்றாக களமிறங்கிய ஆதவ், ஆனந்த்!

சென்னை : விஜயின் தமிழக வெற்றிக் கழக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது வரும் மார்ச் 28ஆம் தேதியன்று (அடுத்த வார…

1 hour ago

வீரப்பன் மகளுக்கு நாதக-வில் முக்கிய பொறுப்பு! காளியம்மாள் இடத்திற்கும் புதிய நபர் நியமனம்!

சென்னை : நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளராக வீரப்பன் மகள் வித்யாராணி நியமிக்கப்பட்டுள்ளார். கட்சியின் தலைமை…

1 hour ago

“அதிமுகவினருக்கு தைரியம் இருக்கா?” சவால் விட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

சென்னை : தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4 கொலைகள் நடந்துள்ளதாக இன்றைய சட்டப்பேரவையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி…

2 hours ago

அட்ராசக்க.., இந்திய அணிக்கு ரூ.58 கோடி பரிசு! பிசிசிஐ அசத்தல் அறிவிப்பு!

டெல்லி : ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை கடந்த மார்ச் 9ஆம்…

2 hours ago

டாஸ்மாக் விவகாரம் : அமலாக்கத்துறை பதில் தர சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை : தமிழகத்தில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் சமீபத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. இந்தச்…

2 hours ago