தெலுங்கானாவில் நல்கொண்டா கிராமத்தை சேர்ந்த, சிவா என்ற 18 வயது இளைஞனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், மரத்தில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
தெலுங்கானாவில் நல்கொண்டா கிராமத்தை சேர்ந்த, சிவா என்ற 18 வயது இளைஞனுக்கு மே 4-ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, இவர் தனது குடும்பத்திற்கு கொரோனா பரவுவதை தடுப்பதற்காக 11 நாட்கள் மரத்திலேயே தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். இவர் தனது வீட்டின் வளாகத்தில் உள்ள ஒரு மரத்தின் கிளைகளில், மூங்கில் குச்சிகளை கொண்டு ஒரு படுக்கையை கட்டி எழுப்பினார். அதில், அவர் 11 நாட்கள் அந்த மரத்தில் செலவிட்டுள்ளார்.
சிவா குடும்பத்தில் மொத்தம் நான்கு பேர் உள்ளனர். தனக்கு பாதித்த கொரோனா , தனது குடும்பத்தில் யாரையும் பாதித்து விடக்கூடாது என்பதற்காக அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இங்கு தனிமைப்படுத்தும் மையமில்ல. 2 நாட்களுக்கு முன்புதான் எஸ்.டி ஹாஸ்டலை ஒரு தனிமைப்படுத்தும் மையமாக மாற்றியுள்ளனர். அதுவரை எங்களிடம் எந்த தனிமைப்படுத்தும் மையமும் இல்லை. மற்ற கிராமங்களில் இதுபோன்ற மையங்கள் ஏதேனும் இருக்கிறதா என்று எனக்கு தெரியாது. அதனால் தான் நான் என்னை இப்படி தனிமைப் படுத்திக் கொண்டேன். எனக்கு உதவ என் கிராமத்தில் யாரும் முன்வரவில்லை. அவர்கள் அனைவரும் வைரஸைப் பற்றி பயப்படுகிறார்கள். யாரும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை எனக் கூறியுள்ளார்.
சிவா பெரும்பகுதியான நேரத்தில் போனை பயன்படுத்துகிறார். மேலும், அவரது குடும்பத்தினர், சிவாவிற்கு, கயிறு மற்றும் ஒரு வாளியை பயன்படுத்தி அவரது உணவுகளை கொடுக்கின்றனர். மேலும் பலர் அந்த கிராமத்தில் தனிமைப்படுத்தி உள்ள நிலையில் சிலர் குளியலறையிலும், சிலர் வயல்களிலும், மற்றவர்கள் சாக்குகளை கொண்டு தற்காலிக குடிசைகள் அமைத்து தனிமைப் படுத்திக் கொண்டுள்ளனர்.
சென்னை : மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் இணைந்த மக்கள் நீதி மய்யத்திற்கு (மநீம), ஒரு மாநிலங்களவை உறுப்பினர்…
பெங்களூரு : இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) ஐபிஎல் கிரிக்கெட் அணியின் புதிய கேப்டன் யார் என்று அறிவிக்கப்படுவார்…
டெல்லி : இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் சமீபத்தில் இந்தியாவை நாங்கள் வீழ்த்துவோம் என சவால் விடும் வகையில் பேசியது சர்ச்சையாக…
சென்னை : அதிமுகவிற்குள் தற்போது என்ன நடக்கிறது, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும், அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே…
பெங்களூர் : இந்த ஆண்டுக்கான (2025) ஐபிஎல் போட்டி வரும் மார்ச் 21-ஆம் தேதி முதல் மே 25 வரை நடைபெறவுள்ளது.…
ரஷ்யா-உக்ரைன் போர் என்பது தொடர்ச்சியாக நடந்து வருவதால் இன்னும் அங்கு ஒரு பதட்டமான சூழ்நிலை நிலவு வருகிறது. அமெரிக்க அதிபராக…