சிறுபான்மை சமூகத்தினரை நாட்டிலிருந்து வெளியேற்றும் தைரியம் யாருக்கும் இல்லை- முதல்வர் நிதீஷ் குமார்.!

Published by
Ragi

சிறுபான்மை சமூகத்தினரை நாட்டிலிருந்து வெளியேற்றும் தைரியம் யாருக்கும் இல்லை என்று நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார். 

பீகார் மாநிலத்தில் 71 தொகுதிகளுக்கான முதல் கட்ட வாக்குபதிவானது கடந்த அக்டோபர் 28ஆம் தேதி நடைபெற்றது. அதனையடுத்து 94 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குபதிவு செவ்வாய்க்கிழமை நடைபெற்றதை தொடர்ந்து மீதமுள்ள 78 இடங்களுக்கான மூன்றாம் கட்ட வாக்குபதிவு நாளை நடைபெறவுள்ளது . இந்த நிலையில் முஸ்லிம்கள் ஆதிக்கம் செலுத்தும் கிஷன்கஞ்ச் மற்றும் அராரியா மாவட்டங்களில் தேர்தல் பேரணியில் ,சீமஞ்சல் பிராந்தியத்தில் உள்ள முஸ்லீம்களான சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவர்கள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்ற வதந்தியை உடைத்தெறிந்து யாரையும் நாட்டிலிருந்து வெளியே அனுப்ப யாருக்கும் தைரியம் இல்லை என்று பீகார் மாநில முதல்வர் நிதீஷ் குமார் தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய அவர் ,தனது அரசாங்கம் பிராந்தியத்தில் அன்பு,அமைதி மற்றும் சகோதரத்துவத்தை பரப்புவதற்கு செயல்பட்டு வருவதாகவும், சமூகத்தின் அனைத்து பிரிவுகளுக்கும் எப்போதும் தனது அரசாங்கம் பணியாற்றி வருவதாகவும், மாநிலத்தில் வகுப்புவாத நல்லிணக்கத்தை உருவாக்கி அனைவரையும் ஒன்றிணைக்க முயற்சி செய்து வருவதாகவும் கூறினார் . மேலும் 15 ஆண்டுகளாக ஆர்.ஜே.டி ஆட்சியில் இருந்து எந்தவொரு வளர்ச்சி பணிகளையும் செய்யாமல் நேரத்தை வீணடித்து வருவதாகவும் கூறிய அவர் எதிர்க்கட்சியினர் சிலர் சாதிகளுக்கும் மத குழுக்களுக்கும் இடையில் சண்டையை ஊக்குவிக்க விரும்புவதாகவும் குற்றம்சாட்டினார் .

Published by
Ragi

Recent Posts

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு! தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனை பற்றி பேச எதிர்க்கட்சிகள் திட்டம்!

பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு! தொகுதி மறுசீரமைப்பு பிரச்சனை பற்றி பேச எதிர்க்கட்சிகள் திட்டம்!

டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…

17 minutes ago

அமெரிக்கா நம்மளை அடக்கி ஆள விரும்புகிறது…கனடாவின் புது பிரதமர் மார்க் கார்னி பேச்சு!

ஒட்டாவா : கனடாவின் லிபரல் கட்சி மக்களின் பெரிய ஆதரவுடன், மார்க் கார்னியை (59) நாட்டின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுத்துள்ளது. கடந்த…

40 minutes ago

கோப்பையை வென்ற இந்தியா..ஒரு நாள் போட்டிகளில் இருந்து ஓய்வா? ரோஹித் சொன்ன பதில்!

துபாய் : இந்திய கிரிக்கெட் அணி 2025-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை வென்றுள்ள நிலையில், இந்திய ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.…

1 hour ago

இன்று இந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை!

சென்னை :  இன்று (மார்ச் 10 ) புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால், அந்த…

2 hours ago

INDvsNZ : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் ‘இந்தியா’! போராடி வீழ்ந்தது நியூசிலாந்து!

2025 ஐசிசி சாம்பியன்ஸ் இறுதி போட்டியில் நியூசிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி 2025 ஐசிசி சாம்பியன்ஸ் பட்டத்தை…

10 hours ago

INDvsNZ : மிரட்டிய இந்திய பந்துவீச்சாளர்கள்.! 252 ரன்கள் ‘டார்கெட்’ வைத்த நியூசிலாந்து!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியானது இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில்…

14 hours ago