ரபேல் ஊழல் விவகாரத்தில் சிபிஐ விசாரணையில் இருந்து பிரதமர் மோடியை யாரும் பாதுகாக்க முடியாது என்று காங்கிரஸ் தலைவர் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய ராகுல்காந்தி, ரபேல் போர் விமான ஒப்பந்தம் குறித்து விசாரணையை துவங்கியதால் சிபிஐ தலைவர் பதவியில் இருந்து மத்திய அரசு அலோக் வர்மாவை நீக்கியதாக குற்றம் சாட்டினார்.இந்நிலையில், உச்சநீதிமன்றம் மீண்டும் அவரை சிபிஐ தலைவராக நியமித்துள்ளது நிம்மதி அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
ரபேல் விவகாரத்தில் இருந்து பிரதமர் மோடியை யாரும் பாதுகாக்க முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மக்கள் பணத்தில் இருந்து 30 ஆயிரம் கோடியை எடுத்து தனது நண்பர் அனில் அம்பானிக்கு மோடி கொடுத்ததை நாட்டு மக்கள் அறிந்து கொள்ள போகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
மேலும் டசால்ட் நிறுவனத்திற்கு 20 ஆயிரம் கோடியை அளித்துள்ள மத்திய அரசு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்திற்கு வழங்க வேண்டிய 15 ஆயிரத்து 700 கோடியை அளிக்க மறுப்பதாகவும், ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கும் நிலைக்கு அந்நிறுவனத்தை தள்ளிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…