கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்ட பொதுத்தேர்வுகள் மாநிலங்கள் நடத்த தடையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 10 -வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 15-ம் தேதி முதல் ஜூன் 25 -ம் தேதி வரை நடைபெறும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். இதற்கு முன் 10 -வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 01-ம் தேதி நடைபெற இருந்தது. ஆனால் கொரோனா காலத்தில் பொதுத்தேர்வை ஒத்திவைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுதாக்கல் செய்தார்.
இதைத்தொடர்ந்து, ஆசிரியர் சங்க தலைவர் மாயவன் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். இதையடுத்து , ஜூன் 15-ம் தேதி முதல் ஜூன் 25 -ம் தேதி 10 -வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கொரோனாவால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொதுத்தேர்வுகள் நடத்த தடையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது. சில நிபந்தனைகளுடன் தேர்வுகளை நடத்திக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா தெரிவித்துள்ளார்.
10,+2 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை எழுதவரும் மாணவர்களுக்கு வசதியாக பேருந்து வசதிகளையும் ஏற்படுத்தித் தர வேண்டும். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். தேர்வு நடைபெறும் மையங்களில் கிருமி நாசினி தெளித்து சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். மேலும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் தேர்வு மையங்களை அமைக்க கூடாது என மாநில அரசுக்கு மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை : தமிழ்நாடு பட்ஜெட் வரும் 14 ஆம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில், இன்று (பிப்.25) அமைச்சரவை…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணியும் ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…