ஊரடங்கை தளர்த்துவதில் அவசரம் தேவையில்லை – உத்தவ் தாக்கரே

Default Image

ஊரடங்கை தளர்த்துவதில் அவசரம் தேவையில்லை.

மராட்டியத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 லட்சத்தை நெருங்கி உள்ளது. இந்த வைரஸால் பலியானவர்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தை நெருங்குகிறது.

இந்நிலையில், இதுகுறித்து அம்மாநிலத்தில் முதல் – முந்திரி உத்தவ் தாக்கரே கூறுகையில், ‘கொரோனாவில் இருந்து எப்போதும் விடுபடுவோம் என்பதைவிட ஊரடங்கை எப்படி தளர்த்துகிறோம் என்பது முக்கியம். ஊரடங்கை அவசரமாக தளர்த்தியவர்கள் எல்லோரும் மீண்டும் ஊரடங்கை பிறப்பித்து உள்ளனர் என்று கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், மாநிலத்தில் 2-வது கொரோனா அலையை நான் விரும்பவில்லை. மாநில அரசின் ‘மிஷன் பிகன் அகெயன்’ திட்டம் மூலம் ஊரடங்கு படிப்படியாக தளர்வு செய்யப்பட்டு வருகின்றன. வைரசின் அச்சுறுத்தல் உள்ள வரை ‘சேஸ் தி வைரஸ்’ பிரசாரம் முடியாது.’ என தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்