இனி அயோத்தி தீர்ப்பில் சீராய்வு மனு இல்லை..! சன்னி வக்பு வாரியம்..!

Published by
murugan

நீண்ட காலமாக நிலுவையில் இருந்த அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் முன்னாள் தலைமை நீதிபதியாக இருந்த ரஞ்சன் கோகோய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு கடந்த சில தினங்களுக்கு முன் சர்ச்சைக்குரிய நிலத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் அறக்கட்டளை தொடங்கி அதன் கீழ் ராமர் கோயில் கட்டலாம் என தீர்ப்பளித்தது.
மேலும் இஸ்லாமியர்கள் மசூதி கட்ட அவர்கள் கேட்கும் இடத்தில் 5 ஏக்கர் நிலத்தை மத்திய அரசும் ,உத்தரப்பிரதேச மாநில அரசும் ஒதுக்கி தர வேண்டும் என தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை ஏராளமானோர் வரவேற்றனர்.
அரசுகொடுக்கும் 5 ஏக்கர் நிலத்தை சிலர் ஏற்கக் கூடாது எனவும், சிலர் ஏற்று கொள்ளலாம் எனவும் தெரிவித்து வருகின்றனர்.இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் முழுமையாக வரவேற்கிறோம் என சன்னி மத்திய வக்பு வாரியத் தலைவர் ஜாபர் ஃபரூக்கி கூறினார்.
மேலும் வக்பு வாரியத்தின் பொதுக்குழுக் கூட்டம் நவம்பர் 26-ம் தேதி (அதாவது நேற்று ) நடைபெறவுள்ளது.அப்போது இது குறித்து முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.அதன்படி நேற்று சன்னி மத்திய வக்பு வாரிய கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் உச்சநீதிமன்ற  தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத் தாக்கல் செய்ய வேண்டாம் என பல உறுப்பினர்கள் கூறியதால் சீராய்வு மனுத்தாக்கல் செய்யவில்லை  என முடிவுஎடுக்கப்பட்டதாக கூறினார்.
கடந்த 17-ம் தேதி நடைபெற்ற முஸ்லீம் தனி நபர் சட்ட வாரியத்தின் கூட்டத்தில்  உச்ச நிதிமன்ற தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனுத்தாக்கல் முடிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
 

Published by
murugan

Recent Posts

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

INDVSBAN: இந்திய சுழலில் சிக்கிய வங்கதேசம்! 280 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…

7 hours ago

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

19 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 day ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 day ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 day ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 day ago