Categories: இந்தியா

இனி “INDIA” இல்லை.. “BHARAT” தான்! அதிரடியாக பாயோவை மாற்றிய அசாம் முதலமைச்சர்!

Published by
பாலா கலியமூர்த்தி

எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயரான (I.N.D.I.A) குறித்து அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கருத்து.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்துவது குறித்து நேற்று மற்றும் நேற்று முன்தினம் கர்நாடக மாநிலம் பெங்களுருவில் எதிர்க்கட்சிகளின் 2வது ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், திமுக, ஆர்.ஜே.டி, ஜே.டி.எஸ், இடது சாரிகள், தேசியவாத காங்கிரஸ், ஆம் ஆத்மி, ஐக்கிய ஜனதா தளம், விசிக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட 26 கட்சிகள் பங்கேற்றனர்.

சோனியா காந்தி, ராகுல் காந்தி, கார்கே, நிதிஷ் குமார், மம்தா பானர்ஜி, லாலு பிரசாத், முக ஸ்டாலின், சரத்பவார், அர்விந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இரண்டு நாட்கள் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அதுமட்மில்லாமல், ஒன்றாக இணைந்துள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டணிக்கு பெயரும் வைத்து அறிவிக்கப்பட்டது.

அதாவது, பாஜகவுக்கு எதிரான எதிர்க் கட்சிகள் கூட்டணிக்கு ‘I.N.D.I.A’ (Indian National Democratic Inclusive Alliance) என பெயர் வைத்து அறிவிக்கப்பட்டது. இந்திய தேசிய ஜனநாயக ஒருங்கிணைந்த கூட்டணி என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை எதிர்கொள்ள ஓர் அணியில் திரண்டு உள்ள எதிர்க்கட்சிகள், தங்கள் கூட்டணிக்கு ‘இந்தியா’ என பெயர் வைத்துள்ளனர். இந்த  நிலையில், எதிர்க்கட்சிகளின் கூட்டணி பெயரான (I.N.D.I.A) குறித்து அசாம் முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

அவரது பதிவில், நமது நாகரிக மோதல்கள் இந்தியாவையும் பாரதத்தையும் மையமாகக் கொண்டது. ஆங்கிலேயர்கள் நம் நாட்டிற்கு இந்தியா என்று பெயர் வைத்தனர். காலனித்துவ மரபுகளில் இருந்து விடுபட பாடுபட வேண்டும். அதோடு நம் முன்னோர்கள் பாரதத்திற்காக போராடினார்கள், நாம் தொடர்ந்து பாரதத்திற்காக போராடுவோம், பாரதத்திற்காக பா.ஜ.க போராடும் என கூறியுள்ளார். மேலும், தனது ட்விட்டர் முகப்பு பக்கத்தில், அதாவது பாயோவில் ‘அசாம் முதலமைச்சர் இந்தியா’ என்பதற்கு பதிலாக ‘அசாம் முதலமைச்சர் பாரத்’ என மாற்றம் செய்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

Live : ஜம்மு காஷ்மீர் தாக்குதல் முதல்…அரசியல் நிகழ்வுகள் வரை!

சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் இதுவரை வெளியான தகவலின்…

18 minutes ago

தேனிலவு கொண்டாட வந்த கடற்படை அதிகாரி..சுட்டுக்கொன்ற பயங்கரவாதிகள்…இதயத்தை நொறுக்கும் புகைப்படம்!

ஸ்ரீநகர் :  ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் நாட்டையே உலுக்கியுள்ளது. இந்தத் தாக்குதலில், திருமணமாகி வெறும் மூன்று…

40 minutes ago

PahalgamAttack : ஜம்மு காஷ்மீர் தாக்குதல்…மனதை உலுக்கும் காட்சிகள்!

ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் உள்ள பைசரான் பள்ளத்தாக்கில் நேற்று பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பராபரையும்…

1 hour ago

தூத்துக்குடி, கன்னியாகுமரி உட்பட 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் அலர்ட்!

சென்னை : தென்தமிழக கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது இதன் காரணமாக நேற்று சில மாட்டவங்களில் மழை…

2 hours ago

ஜம்மு காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்…அவசரமாக இந்தியா திரும்பிய பிரதமர் மோடி!

ஸ்ரீநகர் :  நேற்று (ஏப்ரல் 22) உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில், ஜம்மு-காஷ்மீரின் ஆனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில்…

2 hours ago

கைவிட்ட அணியை கதறவிட்ட கே.எல்.ராகுல்! ஷாக்கான லக்னோ உரிமையாளர்?

லக்னோ : கடந்த ஆண்டு லக்னோ அணிக்காக கேப்டனாக விளையாடிய கே.எல்.ராகுல் சில போட்டிகளில் அணி தோல்வி அடைந்த காரணத்தால் உரிமையாளரிடம்…

3 hours ago