லைசன்ஸ் பெற இனி RTO ஆபீஸுக்கு செல்ல வேண்டாம்.. ஜூன் 1 முதல் புதிய விதி அறிமுகம்.!

Published by
கெளதம்

சென்னை: ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய விதிமுறைகளை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் அறிவித்துள்ளது.

தற்போதயை நடைமுறையின்படி, ஒரு தனிநபர் ஒட்டுநர் உரிமம் பெற வேண்டும் என்றால், அதற்கான சோதனைக்கு ஆர்டிஒ அலுவலகம் செல்ல வேண்டி இருந்தது. இந்த விதியை தற்போது மத்திய அரசு மாற்றி உள்ளது.

அதாவது, தனியார் ஒட்டுநர் பயிற்சி மையங்களே சோதனை நடத்தி லைசன்ஸ் கொடுக்கலாம் என்றும், ஜூன் 1-ம் தேதி முதல் இது நடைமுறைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்ப செயல்முறை:

ஜூன் 1-ம் தேதி முதல் இந்த புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பிறகு, அதன் அதிகாரப்பூர்வ வலைத்தளமான https://parivahan.gov.in என்ற இணையதளத்துக்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம் உரிமத்தின் வகையைப் பொறுத்தது. தேவையான ஆவணங்களைப் பதிவேற்ற வேண்டும். அணைத்து ஆவணங்களைச் சமர்ப்பித்த பிறகு ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.

கட்டணங்கள்:

கற்றல் உரிமம் ரூ.150 எனவும், கற்றவரின் உரிமச் சோதனைக் கட்டணம் ரூ.50, ஓட்டுநர் சோதனைக் கட்டணம் ரூ. 300, ஓட்டுநர் உரிமம் வழங்க ரூ.200, சர்வதேச ஓட்டுநர் அனுமதி வழங்க ரூ.1000, உரிமத்துடன் மற்றொரு வாகன வகுப்பைச் சேர்க்க ரூ.500 ஆக லைசென்ஸ் கட்டணமாக வசூலிக்கப்படும்.

தனியார் பயிற்சி மையங்களுக்கான புதிய விதிகள்:

ஓட்டுநர் பயிற்சி மையங்களுக்கு குறைந்தபட்சம் 1 ஏக்கர் நிலம் இருக்க வேண்டும். அதுவே, நான்கு சக்கர வாகனப் பயிற்சிக்கு 2 ஏக்கர் இருக்க வேண்டும். மேலும், பயிற்சி மையங்களில் தேவையான சோதனை வசதிக்கான கொண்டிருக்க வேண்டும்.

பயிற்சியாளர்கள் உயர்நிலைப் பள்ளி அல்லது டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 வருட ஓட்டுநர் அனுபவம் மற்றும் பயோமெட்ரிக்ஸ் மற்றும் IT அமைப்புகளை பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும்.

பயிற்சி காலம்:

இலகுரக மோட்டார் வாகனங்களுக்கான (LMV) பயிற்சியை 29 மணிநேரம் முதல் 4 வாரங்களில் முடிக்க வேண்டும். தியரி பயிற்சி 8 மணி நேரமும், நடைமுறை பயிற்சி 21 மணிநேரம் தேவை என பிரிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், கனரக மோட்டார் வாகனங்களுக்கான (HMV) பயிற்சியை38 மணிநேரம் முதல் 6 வாரங்களில் முடிக்க வேண்டும். தியரி பயிற்சி 8 மணிநேரம் மற்றும் 31 மணிநேரம்  நடைமுறை பயிற்சி தேவை என பிரிக்கப்பட்டுள்ளது.

Published by
கெளதம்

Recent Posts

தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம்… பல மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து திமுக அறிவிப்பு.!

சென்னை : தமிழக அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பால்வளத்துறை அமைச்சர் ராஜ கண்ணப்பன் வசம் உள்ள காதி, கிராம…

30 minutes ago

விதிகளை மீறிய பாகிஸ்தான் வீரர்கள்… அதிரடியாக அபராதம் விதித்த ஐ.சி.சி.!

பாகிஸ்தான் : கராச்சியில் நடைபெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா இடையேயான முத்தரப்பு கிரிக்கெட் தொடரின்போது, ஐசிசி நடத்தை விதிகளின் நிலை…

2 hours ago

மனதை வருடும் ரெட்ரோவின் “கண்ணாடி பூவே” பாடல் வெளியீடு.!

சென்னை : இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கும் 'ரெட்ரோ' திரைப்படத்தின் முதல் பாடலான…

3 hours ago

தியேட்டர்களில் வெறிச்சோடி…ஓடிடிக்கு வரும் விடாமுயற்சி! எப்போது தெரியுமா?

சென்னை : நடிகர் அஜித்குமார் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் உலகம் முழுவதும் 300 கோடிகள்…

3 hours ago

“எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டில் அதிமுக இல்லை” – அமைச்சர் ரகுபதி!

சென்னை : தமிழகத்தில் திமுக அரசு மீது மக்களுக்கு அதிருப்தியே கிடையாது என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார். சென்னையில்…

4 hours ago

புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன்!

டெல்லி : நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் இன்று புதிய வருமான வரி மசோதாவை தாக்கல் செய்தார். நாட்டின் வரி…

4 hours ago