எத்தனை எதிரணி உருவாக்கப்பட்டாலும் பிரதமர் மோடி தான் நம்பர் 1 – மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே!

Published by
Rebekal

பாஜகவுக்கு எதிராக எத்தனை அணிகள் அமைக்கப்பட்டாலும் பிரதமர் மோடி தான் நம்பர் 1 என மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே தெரிவித்துள்ளார்.

2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் இணைந்து மூன்றாம் அணியாக உருவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், தற்போது டெல்லியில் அரசியல் தலைவர்கள் மற்றும் முக்கிய நபர்களை தனது இல்லத்தில் மத்திய அமைச்சர் ராம்தாஸ் அதாவலே அவர்கள் சந்தித்துள்ளார். அப்போது பேசிய மத்திய அமைச்சர் ராம்தாஸ், எத்தனை அணிகள் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக அமைக்கப்பட்டாலும் அது ஒரு பொருட்டே இல்லை எனவும், மோடியின் தலைமை வலுவாக உள்ளதாகவும், இன்றைக்கும் அவர்தான் நம்பர் ஒன் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சரத்பவார் மீது எங்களுக்கு மரியாதை உள்ளது, ஏனென்றால் மகாராஷ்டிராவின் பிரபலமான தலைவர், நிறைய நற்பணிகள் செய்த தலைவர். ஆனால் இன்றைய சூழலில் தேசியவாத காங்கிரஸ் கட்சி மகாராஷ்டிரத்தில் மட்டுமே உள்ளது. நகரத்துக்கு வெளியே எந்த மாநிலங்களிலும் தேசிய காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவு இல்லை எனவும், இந்த அணியில் மம்தா பானர்ஜி இணைவாரா என்பது சந்தேகம் தான் எனவும் கூறியுள்ளார். மேலும் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்தாலும் அது எவ்வித மாற்றத்தையும் ஏற்படுத்தாது எனவும் கூறியுள்ளார்.

மேலும், ஜனநாயகத்தில் வெற்றிபெற அனைவருக்குமே உரிமை உள்ளது, அனைவருக்கும் தேர்தலில் அணிகளை உருவாக்க உரிமை உள்ளது. ஆனால் நரேந்திர மோடியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல என தெரிவித்துள்ளார். மேலும் சரத் பவர் தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் இருக்காது என தன் நினைப்பதாகவும் வருகிற 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 350 இடங்களில் நாங்கள் வெற்றி பெறுவோம் என தனக்கு முழு நம்பிக்கை இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Published by
Rebekal

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

2 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

2 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

2 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

2 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

3 hours ago