ஒடிசாவில் உள்ள அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் முகக்கவசம் அணிந்து வருபவர்களின் வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா என்ற கோவிட் 19 வைரஸ் இந்தியாவில் தீவிரமடைந்து வருகிறது. இதனால் வைரஸ் பரவலை கட்டுப்படுத்த மத்திய அரசு நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. ஊரடங்கு வரும் 14ம் தேதியுடன் நிறைவடைய இருக்கும் நிலையில், ஒடிசா மாநிலத்தில் மார்ச் 30ம் தேதி வரை ஊரடங்கு நீடிக்கப்படுவதாக அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்திருந்தார். மேலும் மக்கள் வீட்டை விட்டு வெளியேறும்போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார். இதனிடையே ஒடிசாவில் கொரோனாவால் 48 பாதிக்கப்பட்டு, ஒருவர் உயிரிழந்த நிலையில், 2 பேர் குணமடைந்து உள்ளனர்.
இந்நிலையில், அரசின் உத்தரவை அமல்படுத்தும் வகையில் அங்குள்ள பெட்ரோல் பங்குகளில் முகக்கவசம் அணியவில்லை என்றால் பெட்ரோல் இல்லை என்ற விதிமுறைகளை அரசு கொண்டுவந்துள்ளது. அதன்படி அம்மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 1,600 பெட்ரோல் பங்குகளில் முகக்கவசம் அணிந்து வருபவர்களின் வாகனங்களுக்கு மட்டுமே பெட்ரோல், டீசல் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்று அங்குள்ள பல்வேறு பகுதிகளிலும் மளிகை மற்றும் காய்கறி கடை உரிமையாளர்களும் முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களுக்கு பொருட்கள் வழங்க மறுத்து வருவதாக கூறப்படுகிறது.
ஏடன்: அமெரிக்கா ஏமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது பெரிய அளவிலான தாக்குதல்களைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்…
சென்னை : திடீர் உடல்நலக்குறைவால் ஏ.ஆர்.ரகுமான் சென்னை அப்போலோவில் இன்று காலை அனுமதிக்கப்பட்டார். இந்த செய்தியை கேட்ட உடன் முதல்வர்…
சென்னை : டாஸ்மாக் முறைகேடு விவகாரம் தமிழ்நாடு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அமலாக்கத் துறை மார்ச் 6, 2025ல்…
சென்னை : பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அதிகாலை திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை அப்போலோவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவசர சிகிச்சை…
சென்னை : 18-வது ஐபிஎல் சீசன் இந்த ஆண்டு வருகின்ற 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தொடங்கி வரும் மே 25-ஆம்…
சென்னை : அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி - சட்டப் பேரவை உறுப்பினர் செங்கோட்டையன் இடையே அதிருப்தி நிலவுவதாக சமூக…