எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது – டி.ஆர். பாலுவிடம் மத்திய அமைச்சர் விளக்கம்

Published by
Venu
எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்று  டி.ஆர். பாலுவிடம் மத்திய அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
மத்திய அரசானது அண்மையில் புதிய கல்வி கொள்கை 2020-ஐ அறிமுகப்படுத்தியது.அந்த கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை இடம் பெற்றிருந்தது. அதாவது, தாய்மொழி, ஆங்கிலம் தவிர்த்து மூன்றாவது மொழியாக ஏதேனும் ஒரு விருப்ப மொழியை தேர்ந்தெடுத்து கொள்ளலாம் என கூறப்பட்டது. மேலும், 3,5,8-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைமுறையையும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.இந்த பல்வேறு கருத்துக்களால் புதிய கல்வி கொள்கையை தமிழகத்தில் பலரும் எதிர்த்து கருத்து கூறி வருகின்றனர்.
இதனிடையே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இந்த புதிய கல்விக் கொள்கை தொடர்பாக பிரதமர் மோடிக்கு கோரிக்கை ஒன்றை வைத்தார்.அவரது கோரிக்கையில், மாநிலங்களில் உரிமையை பறிக்கும் வகையில் புதிய கல்விக் கொள்கை உள்ளது எனவும், தொழில் பயிற்சி அறிமுகம் சாதியப் படிநிலைகள் வலுப்படுத்தும் வகையில் உள்ளது. புதிய கல்விக் கொள்கையில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும், புதிய கல்விக் கொள்கையில் இட ஒதுக்கீடு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை, மும்மொழிக் கொள்கையை திரும்பப் பெற வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று திமுக நாடாளுமன்ற குழுத்தலைவர் டி.ஆர். பாலு மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியாலை  நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்துள்ளார்.இது குறித்து மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,புதிய கல்வி கொள்கை குறித்த கோரிக்கை மனுவை தி.மு.க தலைவர் திரு. மு.க ஸ்டாலின் அவர்களின் சார்பாக T.R பாலுஜி அவர்கள் என்னிடம் சமர்ப்பித்தார். அவரிடம் எந்த மொழியும் எந்தவொரு மாநிலத்தின் மீதும் திணிக்கப்படாது என்பதை விளக்கினேன்.மேலும் T.R பாலுஜி அவர்களிடம், பயிற்று மொழியை தெரிவு செய்துகொள்வது அந்தந்த மாநிலங்களின் உரிமை என்பதையும் மற்றும் புதிய கல்வி கொள்கையின் முக்கிய அம்சங்கள் குறித்தும் அவரிடம் விளக்கினேன். நாம் ஒன்றுபட்டு புதிய இந்தியாவை உருவாக்குவோம் என்று பதிவிட்டுள்ளார்.

Published by
Venu

Recent Posts

“பாஜக தலைவராக நான் தொடர முடியாது! அதற்கு முன்னால்..,” அண்ணாமலை ஆவேசம்!

“பாஜக தலைவராக நான் தொடர முடியாது! அதற்கு முன்னால்..,” அண்ணாமலை ஆவேசம்!

சென்னை : நேற்று (பிப்ரவரி 12) சென்னையில் பாஜக சார்பில் மத்திய பட்ஜெட் 2025 பற்றிய விளக்க கூட்டம் நடைபெற்றது.…

22 minutes ago

“அதிமுக ஒன்றாக இருக்க வேண்டும்.., என்னை சோதிக்காதீர்கள்!” இபிஎஸ் பெயரை தவிர்த்த செங்கோட்டையன்!

ஈரோடு : கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று கோவையில் அத்திக்கடவு - அவினாசி திட்டத்திற்கு நன்றி தெரிவிக்கும் வகையில் மூன்று மாவட்ட…

1 hour ago

இங்கிலாந்தை ஒயிட்வாஷ் செய்த இந்திய அணி… 3-வது ஒருநாள் போட்டியிலும் அபார வெற்றி.!

அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…

11 hours ago

விஜய் தேவரகொண்டாவுக்கு சூர்யா வாய்ஸ் ஓவர்… கவனம் ஈர்க்கும் ‘கிங்டம்’ டீசர்.!

சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…

12 hours ago

விரைவில் பூமிக்கு திரும்புகிறார் சுனிதா வில்லியம்ஸ்.! எதிர்பார்த்ததை விட வேகமெடுக்கும் நாசா!

கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…

13 hours ago

விட்டதை பிடித்த இலங்கை… ஆஸி.,யை வீழ்த்தி ஒரு நாள் தொடரில் முதல் வெற்றி.!

கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…

13 hours ago