ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு நாள்தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர்.தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு சிறப்பு சலுகையாக ரூ.70-க்கு 4 லட்டுகள் வழங்கப்படும். ஒரு லட்டு தயாரிக்க 40 ரூபாய் ஆகிறது. இதனால் வருடத்திற்கு 200 கோடி நஷ்டம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
இதனால் தரிசனத்திற்காக காத்திருக்கும் அனைத்து பக்தர்களுக்கும் ஒரு லட்டு மட்டும் கொடுத்துவிட்டு மேற்கொண்டு வாங்கும் ஒவ்வொரு லட்டிற்கும் ரூபாய் 50 கட்டணம் செலுத்தும் திட்டம் கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் சென்னை தியாகராய நகரில் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய அறங்காவலர் குழு உறுப்பினர்களின் பதிவு ஏற்பு விழா நடைபெற்றது.இதில் அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சி முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் திருப்பதியில் விற்கப்படும் லட்டுகளின் விலை உயர்த்துவது இல்லை, இப்போது விற்கப்படும் அதே மானிய விலையில் தான் லட்டுகள் தொடர்ந்து விற்கப்படும் என கூறினார்.
இலங்கை : ரோஹித் ஷர்மாவின் மோசமான பார்ம் குறித்து ரசிகர்கள் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கவலையை எழுப்பி வருகிறார்கள். நேற்றைய…
சென்னை : கடந்த இரண்டு வாரமாக புதுப்புது உச்சம் தொட்டு வரும் ஆபரண தங்கத்தின் விலை உயர்வுக்கு அமெரிக்கா-சீனா, கனடா…
பஞ்சாப் : பாலிவுட் நடிகர் சோனு சூட் எப்போதும் தனது தாராள மனசுக்கு பெயர் பெற்றவர். அவர் பெரும்பாலும் தேவைப்படுபவர்களுக்கு…
சென்னை : இரண்டு நாள் அரசு முறை பயணமாக நெல்லை சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று 2வது நாளாக கள…
சென்னன: நடிகர் அஜித் நடிப்பில் கடசியாக வெளியான துணிவு படத்துக்கு பின், கடந்து 2 ஆண்டுகளுக்கு பிறகு மிக பிரம்மாண்ட…
டெல்லி : முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் கடந்த 2015ம் ஆண்டு அக்டோபரில் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு…