போலீசாரின் நடவடிக்கையால் எந்த விவசாயியும் உயிரிழக்கவில்லை என்று மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசால் புதிதாக கொண்டுவரப்பட்ட வேளாண் திட்டங்களை ரத்து செய்யக் கோரி கடந்த ஓராண்டு காலமாக டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வந்தனர். விவசாயிகளின் தொடர் போராட்டத்தின் பலனாக தற்பொழுது வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதா நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டு அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்து, புதிய வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பலர் உயிரிழந்த நிலையில், அவர்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பான கேள்விகள் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்டது. இதற்கு மத்திய வேளாண் துறை மந்திரி நரேந்திர சிங் தோமர் அவர்கள் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.
அதில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் போலீசார் நடவடிக்கை உயிரிழக்கவில்லை எனவும், பிற காரணங்களால் தான் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு மற்றும் வேலைவாய்ப்பு உள்ளிட்ட பிற சலுகைகள் வழங்குவது அந்தந்த மாநில அரசுகளின் முடிவு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை : இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள…
சென்னை : நேற்று முன்தினம் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான முக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த…
ஹைதராபாத் : நேற்று (ஏப்ரல் 12) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக…
சென்னை : கிறிஸ்தவ மத போதனைகளை ராப் பாடல்கள் போல பாடி இணையத்தில் பிரபலமானவர் கோவையை சேர்ந்த மத போதகர்…
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…