டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தாலும், உயிரிழப்புகள் ஏதும் பதிவாகவில்லை.
நாடு முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் தற்போதும் குறைந்து கொண்டே தான் வருகிறது. இந்நிலையில், அக்டோபர் மாதத்தில் கொரோனா மூன்றாம் அலை இந்தியாவில் உச்சம் தொடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. எனவே, நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மேலும், தலைநகர் டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா பாதிப்பு அதிகளவில் பரவி வந்தது.
டெல்லி அரசு மேற்கொண்ட தீவிரமான கட்டுப்பாட்டு நடவடிக்கை காரணமாக, தற்போது டெல்லியில் கொரோனா பாதிப்பு மிக அதிக அளவில் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் புதிதாக 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், 48 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் கடந்த 24 மணி நேரத்தில் உயிர் இழப்புகள் எதுவும் டெல்லியில் பதிவாகவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், 393 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சென்னை : இன்று சென்னையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள…
சென்னை : நேற்று முன்தினம் தமிழக அரசியலில் மிகவும் பரபரப்பான முக்கிய நிகழ்வு நடைப்பெற்றது. மத்திய அமைச்சரும், பாஜக மூத்த…
ஹைதராபாத் : நேற்று (ஏப்ரல் 12) நடந்த ஐபிஎல் 2025 போட்டியில், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத்…
சென்னை : தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக…
சென்னை : கிறிஸ்தவ மத போதனைகளை ராப் பாடல்கள் போல பாடி இணையத்தில் பிரபலமானவர் கோவையை சேர்ந்த மத போதகர்…
ஹைதராபாத் : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் அதிரடி ஹைதராபாத் அணிக்கு என்ன தான் ஆச்சு என்கிற கேள்விகளை கேட்டவர்கள் அனைவர்க்கும்…