வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமுமில்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ், வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக நீடிக்கிறது. ரெப்போ வட்டி விகிதத்தில் 6-வது முறையாக ரிசர்வ் வங்கி மாற்றம் எதுவும் செய்யவில்லை.
ரெப்போ வட்டி விகிதம் கடைசியாக 2023 பிப்ரவரி மாதம் 6.25 சதவீதத்தில் இருந்து 6.5 சதவீதமாக உயர்த்தப்பட்டது. தற்போது அதே நிலையே தொடர்கிறது என்றார். தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் கூறியதாவது, 2024ல் உலக பொருளாதார வளர்ச்சி நிலையானதாக இருக்கும். உலகளாவிய வர்த்தக பலவீனமாக இருந்தாலும், அது மீட்சிக்கான அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது மற்றும் 2024இல் அது வேகமாக வளர வாய்ப்புள்ளது.
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தல்…. மொபைல் சேவைகளை நிறுத்தி உள்துறை அமைச்சகம் உத்தரவு!
தற்போது பணவீக்கம் கணிசமாக குறைந்துள்ளது, இந்தாண்டு நிலையாக இருக்கும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது உயர்ந்துள்ள பொதுக் கடன்கள், சில மேம்பட்ட பொருளாதாரங்கள் உட்பட பல நாடுகளில் மேக்ரோ பொருளாதார ஸ்திரத்தன்மை குறித்து கவலை எழுந்துள்ளது.
அதன்படி, இந்தாண்டு முடிவில் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதத்தில் உலகளாவிய பொதுக் கடன் 100% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மேலும், புதிய முதலீடுகளுக்கான நிதி இடத்தை உருவாக்க கடன் சுமைகளைக் குறைப்பது அவசியம் எனவும் ஆர்பிஐ ஆளுநர் தெரிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…