இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் இந்த 8 எட்டு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உயிரிழப்பு இல்லை..!

Published by
murugan

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8 எட்டு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலைக்கு மத்தியில், நேற்று செவ்வாய்க்கிழமை காலை சுகாதார அமைச்சகத்தின் தகவல்படி இந்தியாவில் 3,23,144 லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. 2771 உயிரிழப்புகள் ஏற்பட்டது. மருத்துவமனைகளில் 28,82,204 பேர் சிகிக்சை பெற்று வருகின்றனர்.

இந்தியாவில் செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்ட 71.68 சதவீதம் பேர் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், டெல்லி, கர்நாடகா, கேரளா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம், தமிழ்நாடு, குஜராத் மற்றும் ராஜஸ்தான் உள்ளிட்ட பத்து மாநிலங்களை சார்ந்தவர்கள். இந்நிலையில், மத்திய அரசு இதுவரை 15 கோடிக்கும் அதிகமான தடுப்பூசி மருந்துகளை மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளது.

இதன் அடையாளமாக, எட்டு மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் செவ்வாய்க்கிழமை எந்த கொரோனா தொடர்பான உயிரிழப்புகள் ஏற்படவில்லை  தெரிவிக்கப்பட்டுள்ளது. இவை தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, லடாக், திரிபுரா, லட்சத்தீவு, மிசோரம், நாகாலாந்து, அருணாச்சல பிரதேசம் மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகள் ஆகியவை ஆகும்.

மகாராஷ்டிராவில் நேற்று 895 பேர் உயிரிழந்துள்ளனர். 66,358  பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.பஞ்சாபில் நேற்று 5,932 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 100 பேர்  உயிரிழந்துள்ளனர். 3,774  டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மொத்தமாக இருவரை  3,51,282 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாநில சுகாதாரத்துறை  தெரிவித்துள்ளது.

அதேபோல கர்நாடகாவில் 31,830 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 180 பேர்  உயிரிழந்துள்ளனர். 10,793 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். குஜராத்திலும்  14,352 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 170 பேர்  உயிரிழந்துள்ளனர். 7,803 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். டெல்லியில் இன்று 24,149 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 381 பேர்  உயிரிழந்துள்ளனர். 17,862 டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜனவரியில் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை அறிமுகப்படுத்தியதாக மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்  தெரிவித்தார். மேலும், தடுப்பூசி மே 1 முதல் 18 -வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் தடுப்பூசி  செலுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கடந்த  உடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டில் தொற்றுநோயை வெல்ல அதிக அனுபவத்துடன் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் இந்தியா தயாராக உள்ளது என தெரிவித்தார்.

Published by
murugan
Tags: coronavirus

Recent Posts

SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

SRH vs MI : ஹைதராபாத்தை சம்பவம் செய்த மும்பை இந்தியன்ஸ்! 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் ஹைதராபாத் கிரிக்கெட் மைதானத்தில் இன்று…

2 hours ago

இது அவுட் இல்ல.., மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக இஷான் கிஷான் ‘சர்ச்சை’ அவுட்!

ஹைதராபாத் :  இன்றைய ஐபிஎல் போட்டியில் (ஏப்ரல் 23) சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) அணி மும்பை இந்தியன்ஸ் (MI) அணிக்கு…

3 hours ago

SRH vs MI : ஒற்றை ஆளாய் மும்பையை எதிர்த்த SRH வீரர் கிளாசென்! வெற்றிக்கு 144 ரன்கள் டார்கெட்!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…

4 hours ago

பாகிஸ்தானுடன் இனி எந்த உறவும் இல்லை? இந்தியா எடுக்கப்போகும் முக்கிய முடிவு!

டெல்லி : ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பகுதியில் நேற்று பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்த…

4 hours ago

SRH vs MI : வெற்றிப்பாதையை தொடருமா மும்பை? பேட்டிங் களத்திற்கு தயாரான ஹைதராபாத்!

ஹைதராபாத் : இன்றைய ஐபிஎல் போட்டியில் பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை…

6 hours ago

ரியல் ஹீரோ., பஹல்காம் தாக்குதலில் மக்களை காப்பாற்ற உயிர் விட்ட இஸ்லாமிய தொழிலாளி!

ஸ்ரீநகர் : காஷ்மீரில் நேற்று அனந்த்நாக் மாவட்டம் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…

7 hours ago