மும்பையில் பீர் தர மறுத்த நண்பர்களை கத்தியால் குத்திய கொலையாளியை, போலீசார் சில மணிநேரத்தில் பிடித்தனர். கத்தி குத்தப்பட்ட நபர்களில் ஒருவர் உயிரிழந்தார்.
மும்பையை ஜோகேஸ்வரி பகுதியை சேர்ந்த அஜய் டிராவிட்டும் அவரது சகோதரன் விஜய் இருவரும் பீர் ஆர்டர் செய்து குடித்து கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த சோனு என்ற அவர்களது நண்பர் வந்துள்ளார்.
அவர் அஜய் டிராவிட் மற்றும் விஜயிடம் பீர் கேட்டுள்ளார். அதற்கு இருவருமே தர மறுக்கவே கோபமடைந்த சோனு, அங்கிருந்த ஐஸ் வெட்டும் கத்தியை கொண்டுஅஜய் டிராவிட் மற்றும் விஜயை சரமாரியாக குத்தியுள்ளான்.
இதில் படுகாயமடைந்த இருவரும் சத்தம் எழுப்பவே, அங்கு அருகில் இருந்த நண்பர்கள் ஓடி வருவதை கண்டு, சோனு அங்கிருந்து தப்பிவிட்டான். இதில், அஜய் டிராவிட் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விஜய் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். பின்னர் தீவிர தேடுதல் வேட்டைக்கு பின்னர் சோனுவை போலீசார் கைது செய்தனர்.
சென்னை : இசையமைப்பாளர் இளயராஜா லண்டனுக்கு சென்று தனது முதல் சிம்பொனியை அரங்கேற்றி பெரிய சாதனை படைத்த இளையராஜா இன்று…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய கிரிக்கெட் அணி கோப்பையை வென்ற நிலையில், பாராட்டுக்கள்…
சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தொடரில் மணிப்பூர் நிலவரம் மற்றும் ஒரே நாடு…
சென்னை : நேற்று தூத்துக்குடி சிதம்பர நகா் பேருந்து நிறுத்தம் அருகே தூத்துக்குடி வடக்கு மாவட்டச் செயலரும், அமைச்சருமான கீதாஜீவன் தலைமையில்…
சென்னை : வெற்றிமாறன் எடுத்த படங்களில் தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி இந்திய சினிமாவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்திய படங்களில் வடசென்னை…
டெல்லி : நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வு இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. ஏற்கனவே, முதற்கட்ட பட்ஜெட் கூட்டத்தொடர்…