Election Commission of India [File Image]
மத்தியில் தற்போது நடைபெற்று வரும் பாஜக ஆட்சியானது இந்த வருடம் மே மாதத்துடன் நிறைவடைய உள்ளது. அதன் காரணமாக தேர்தல் வேலைகள் தற்போது மும்மூரமாக அனைத்து மாநிலங்களிலும் கட்சி ரீதியிலும், நிர்வாக ரீதியிலும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று காலை ஏப்ரல் 16ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது என ஒரு செய்தி பரவியது. இந்த தேர்தல் தேதி குறித்து தற்போது டெல்லி தேர்தல் ஆணையம் ஒரு விளக்கத்தை அளித்து உள்ளது.
பட்ஜெட்டில் இது நடந்தால் தங்கம், வைரம் விலை குறையும்..!
அதாவது, டெல்லி மக்களவைத் தேர்தல் பணிகளை திட்டமிட்டு முடிப்பதற்காக ஒரு உத்தேசமாக ஏப்ரல் 16 எனும் தேதியை குறிப்பிட்டுள்ளதாகவும், அது உறுதியான தேர்தல் தேதி இல்லை என்றும் தெளிவுபடுத்தி உள்ளது.
முன்னதாக டெல்லி தேர்தல் தலைமை அதிகாரி, டெல்லியில் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார். அதில் ஏப்ரல் 16ஆம் தேதியை உத்தேசமாகக் கொண்டு தேர்தல் பணிகளை ஆரம்பிக்க கேட்டுக் கொண்டு உள்ளார். அதன்படி தான் ஏப்ரல் 16 தேர்தல் தேதி என தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 11 ஆம் தேதி மக்களவைத் தேர்தல் ஆரம்பித்து மே 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக இந்தியா முழுக்க நடைபெற்றது. அதேபோல், தற்போதும் நாடாளுமன்ற தேர்தலானது பல்வேறு கட்டங்களாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தல் தேதியானது பிப்ரவரி மாதம் இறுதியில் அல்லது மார்ச் முதல் வாரத்திலோ அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என கூறப்படுகிறது.
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…
டெல்லி : பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, மத்திய அரசு தற்போது கடுமையான நிலைப்பாட்டை எடுத்து வருகிறது. நேற்றைய தினம்…
சூரத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து ஒவ்வொரு துறையிலும் தனது பலத்தை அதிகரிப்பதில் இந்தியா தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. வாகா…
டெல்லி : பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில், இந்த தாக்குதலை அடுத்து இந்தியா -…
காந்திநகர் : நேற்று முன்தினம் காஷ்மீர் மாநிலம் அனந்த்நாத் மாவட்டத்தில் பஹல்காம் பகுதியில் சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய…
காஷ்மீர் : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு தான் பொறுப்பல்ல என்று லஷ்கர்-இ-தொய்பா (LeT) துணைத் தலைவர் சைஃபுல்லா…