நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றிபெற்ற நிலையில் ,பீகார் முதல்வராக நிதிஷ்குமார் பதவியேற்றுள்ளார்.
பீகார் சட்டமன்றத்தை பொருத்தவரை ஆட்சியமைக்க 122 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜக கூட்டணி நடந்து முடித்த சட்டப்பேரவைத் தேர்தலை ஆட்சியமைக்க தேவையான இடங்களை விட அதிக இடங்களில் வெற்றிபெற்றது.பாஜக கூட்டணியில் ஐக்கிய ஜனதாதளம்,விகாஷில் இன்சான் (Vikassheel Insaan Party),ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (Hindustani Awam Morcha) உள்ளிட்ட கட்சிகள் போட்டியிட்டது.
பாஜக 74 இடங்களையும், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையும், வி.ஐ.பி. மற்றும் எச்.ஏ.எம்.எஸ். கட்சிகள் தலா 4 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதைத்தொடர்ந்து, பாட்னாவில் தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம்பெற்ற முக்கிய தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பீகார் முதல்வராக மீண்டும் நிதிஷ்குமார் தேர்வு செய்யப்பட்டார்.
ஏற்கனவே 3 முறை தொடர்ந்து முதல்வராக பதவி வகித்த நிலையில் தற்போது நான்காவது முறையாகவும் முதல்வராக தேர்வு செய்யப்பட்டார் நிதிஷ்.இதனால் நேற்று நிதிஷ் குமார் ஆளுநரை சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.ஆகவே இன்று நிதிஷ் குமார் முதலமைச்சராக பதவியேற்றுள்ளார் .நிதிஷ்குமாருக்கு ஆளுநர் சவுகான் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.பீகாரில் 7வது முறையாகவும், தொடர்ந்து 4வது முறையாகவும் முதல்வரானார் நிதிஷ்குமார்.
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…
துபாய் : நடைபெற்று வரும் மகளிர் உலகக் கோப்பை தொடரில் முதல் அரை இறுதிப் போட்டியானது இன்று நடைபெற்றது. இந்தப்…