பீகாரின் அடுத்த முதல்வர் நிதிஷ்ஜி தான்.. சுஷில் மோடி உறுதி..!

Default Image

பீகார் முதலமைச்சராக நிதீஷ் குமாரை மாற்றுவதில் என்று பாஜக நேற்று  தெரிவித்துள்ளது. பீகாரின் 243 இடங்களில்  74 இடங்களில்  பிஜேபி வென்றது, நிதீஷ் குமாரின் ஜனதா தளம்  43 இடங்களில்   வெற்றி பெற்றது.

பீகாரில் கூட்டணிக்கு தலைமை வகிக்கும் நிதீஷ் குமாரின் ஜனதா தளத்தை விட பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.  முதலமைச்சர் இல்லாத மாநிலத்தில் முதல் முறையாக பாஜக ஒரு மேலதிக வெற்றியைப் பெற்ற நிலையில்,  பீகாரில் முதல்வர் பதவியை பாஜக கைப்பற்ற வாய்ப்பு இருப்பதாக  செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், பீகார் துணை முதல்வரும் பாஜக மூத்த தலைவருமான சுஷில் குமார் மோடி நேற்று கூறுகையில், நிதிஷ்ஜி முதலமைச்சராக இருப்பார், இதில் எந்த குழப்பமும் கிடையாது. இந்திய அரசியல் வரலாற்றில், மிகக் குறைவான தலைவர்களே 4 முறை முதல்வராக பதவியில் இருந்துள்ளனர்.

அவர்களில் ஒருவர்தான் நிதிஷ் குமார் என கூறினார். ஒரு தேர்தலில், “சிலர் அதிகமாக வெல்வார்கள், சிலர் குறைவாக வெற்றி பெறுவார்கள்” என்று அவர் கூறினார். ஆனால் நாங்கள் சம பங்காளிகள் என்றும் பாஜக ஒருபோதும் பீகாரை சொந்தமாக ஆட்சி செய்யவில்லை, நிதீஷ் குமார் இல்லாமல் மாநிலத்தில் அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள முடியாது என்று சுஷில் குமார் மோடி தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live TODAY
Virat Kohli
ind vs nz - jadeja
mk stalin and Dharmendra Pradhan
dharmendra pradhan Kanimozhi
Srivanigundam - School Student
Dharmendra Pradhan