பீகார் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம்( ஜேடியு) தலைவர் நிதிஷ் குமாரும் மீண்டும் கட்சி மாறுவது குறித்து பீகாரில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. முதல்வர் நிதிஷ் குமார் ராஷ்ட்ரிய ஜனதா தளம் உடன் கூட்டணியை முறித்து கொண்டு இன்று முதல்வர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக ஆதரவுடன் புதிய ஆட்சியை அமைக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
இன்று காலை 10 மணிக்கு ஜேடியு எம்எல்ஏக்களுடன் நிதிஷ் குமார் சந்திப்பு நடத்தலாம் என்று இதைத் தொடர்ந்து அவர் ராஜ்பவனுக்குச் சென்று தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்து மாலைக்குள் பீகாரில் பாஜக ஆதரவுடன் புதிய ஆட்சி அமைக்கலாம் எனவும் இது தொடர்பாக பீகார் மாநில ஆளுநரை இன்று சந்திக்க முதல்வர் நிதிஷ் குமார் நேரம் கேட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
12 ஐஏஎஸ் அதிகாரிகள் பணி இடமாற்றம்..!
நிதிஷ் குமாருடன் பாஜகவின் துணை முதல்வர் பதவியேற்கலாம் எனவும் சட்டசபை சபாநாயகர் பதவியும் பாஜக ஒதுக்கீட்டின் கீழ் வரலாம் எனவும் அதே நேரத்தில் நிதிஷ் குமாரின் பதவியேற்பு விழாவில் பாஜக தலைவர் ஜேபி நட்டா மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், மேலும் பல பாஜக தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர் என கூறப்படுகிறது.
முதல்வர் பதவியை ராஜினாமா செய்து பாஜகவுடன் இணைந்து புதிய ஆட்சி அமைத்தால் 18 மாதங்களுக்குள் 2-வது முறையாக நிதிஷ் குமார் அணி மாறுகிறார். கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலிலும், 2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் ஆட்சியை பிடித்தார்.
ஆகஸ்ட் 2022 இல் பாஜகவுடனான கூட்டணியை முறித்துக்கொண்டு, ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் காங்கிரஸுடன் இணைந்து பெரும் கூட்டணி அமைத்து நிதிஷ் குமார் ஆட்சியை அமைத்தார் என்பது குறிப்பிடத்க்கது.
சென்னை : தமிழக அமைச்சரவையில் நேற்று அனைவரும் எதிர்பார்தத பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. குறிப்பாக, திமுகவினர் அதிகம் எதிர்நோக்கி காத்திருந்த…
சென்னை : நீண்ட நாட்களாக கூறப்பட்டு வந்த தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் குறித்த முக்கிய அறிவிப்பு நேற்று அதிகாரப்பூர்வமாக வெளியானது.…
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…