நாட்டில் பட்டினி, வேலையின்மை, தீண்டாமை இருப்பதாக நிதின் கட்காரி கூறியதாக வெளியான கருத்துக்களுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். தான் பேசியது தவறாக புரிந்துகொள்ளப்பட்டது என விளக்கமளித்துள்ளார்.
மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் ஒரு அரசு விழாவில் பேசுகையில், ‘ நாட்டில், பட்டினி, வேலையின்மை, தீண்டாமை இருக்கிறது.’ என்று பேசியிருந்தார்.
அவர் மேலும் பேசுகையில், ‘ மக்களிடம் பணவீக்கம், சாதி பாகுபாடு இருக்கிறது. நம் நாட்டில் 100க்கும் மேற்பட்ட நகரங்களில் அடிப்படை வசதி கூட இல்லை. அதனால் பெரும்பாலான மக்கள் நகரத்தின் பக்கம் வருகின்றனர்.’ என்றும் அவர் பேசியதாக கருத்துக்கள் வெளியாகி இருந்தன.
ஒரு மத்திய அமைச்சர் இந்த மாதிரியான கருத்துக்கள் கூறியது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது. பின்னர் இது குறித்து விளக்கமளித்த அமைச்சர் நிதின் கட்காரி, நாடு முன்னேற்ற பாதையில் செல்கிறது என நான் பேசிய கருத்துக்கள் தவறாக இங்கு புரிந்துகொள்ளப்பட்டது என அவர் கூறியிருந்தார்.
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…
நாட்டிங்ஹாம் : இங்கிலாந்து நாட்டில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 போட்டிகள் மற்றும் 5 ஒரு…