நித்தியானந்தா ஆசிரமம் மீது புகார்: இரு பெண் உதவியாளர்கள் கைது..!?

Default Image

நித்தியானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைத்து உள்ள தங்களது இரண்டு பெண் குழந்தைங்களை மீட்டு தருமாறு பெங்களூரை சார்ந்த பெற்றோர்கள் குஜராத் உயநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுதாக்கல் செய்து உள்ளனர்.
கடந்த 2013-ம் ஆண்டு தங்களின் நான்கு பெண் குழந்தைகளையும் பெங்களூரூவில் நித்தியானந்தா நடத்தி வரும் கல்வி நிறுவனத்தில் சேர்த்ததாக கூறினார்.எங்களின் அனுமதி இல்லாமல் எங்கள் குழந்தைகளை அகமதாபாத்தில் உள்ள கல்வி நிறுவனத்த்திற்கு நிர்வாகம் அனுப்பியதாக கூறினர்.
குழந்தைகளை பார்க்க அகமதாபாத் சென்றபோது அவர்களுக்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.பின்னர் போலீசார் உதவியுடன் இரண்டு குழந்தைகளை மீட்டு வந்ததாகவும் கூறினர்.மேலும் மீதம் உள்ள இரண்டு பெண் குழந்தைகளை மீட்டு தருமாறு மனுவில் கேட்டுக்கொண்டனர்.
பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் நித்தியானந்தா மற்றும் ஆசிரம நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யபட்டது.இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பாக நித்தியானந்தா  ஆசிரம பெண் உதவியாளர்களை கைது செய்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்