நிதியமைச்சரின் கவனம் பெற்ற 9 முக்கிய அறிவிப்புகள்- முழு விவரமும் உள்ளே

Published by
kavitha

கொரோனா பாதிப்பு எதிரொலியாக பொதுமக்களுக்கு உதவும் வகையில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.

மத்திய அரசின் ‘கிஷன் சம்மான் நிதி’ என்ற திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு ரூ.6000 வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்த நிலையில் இதிலிருந்து ரூ. 2000 தற்போது உடனடியாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ள நிதியமைச்சர் இதன் மூலம், 8.69 கோடி விவசாயிகள் பயன் அடைவார்கள் என்று தெரிவித்துள்ளது.

உலகளவில் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவினால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்தியாவில் 600க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்ட நிலையில் 16  பேர் மடிந்துள்ளனர்.தமிழகத்தில் 26பேர் பாதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் பலியாகிய நிலையில் இந்தியாவில் தற்போது பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கி உள்ளது.இந்நிலையில் தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் 144 ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் வீட்டினுள் இருந்து வருகின்றனர்.கொலைக்கார வைரஸால் மக்கள் தங்களை தனிமைப்படுத்தி வருகின்றனர்.  கொரோனா பாதிப்பு எதிரொலியாக பொதுமக்களுக்கு உதவும் வகையில் நாடு தழுவிய ஊரடங்கால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்யும்  இதற்காக 1.70 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டு  உள்ளார்.

நிதியமைச்சரின் அறிவிப்புகள்

  • ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் படி தொழிலாளர்களுக்கு தலா ரூ.2,000 வழங்கப்படும். இதன் மூலமாக சுமார்  5 கோடி குடும்பங்கள் பயன்பெறுவார்கள்.
  • ஏழை மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவைப் பெண்கள் பயன்பெறும் வகையில் தலா ரூ.1000 முதற்கட்டமாக இரண்டு தவணைகளாக வழங்கப்படும்.இதனால் சுமார் 3 கோடி பேர்  பயன்பெறுவார்கள்.
  • ஜன் தன் யோஜனா திட்டத்தின் கீழ் வங்கிக்கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு அடுத்த 3 மாதத்திற்கு தலா ரூ.500 வரவு வைக்கப்படும்.  இதன் மூலமாக சுமார் 20 கோடி பெண்கள் பயன்பெறுவார்கள்.
  • உஜ்வாலா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு கேஸ் இணைப்பு இலவசமாக வழங்கப்பட்டு உள்ளது. இதில் ஏற்கெனவே உஜ்வாலா திட்டத்தின் கீழ் உள்ள பெண்களுக்கு அடுத்த 3 மாத காலத்திற்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும். இதில் 8.3 கோடி பெண்கள் பயன்பெறுவார்கள்.
  • மகளிர் சுய உதவி குழுக்களில் இருக்கும் சுமார் 7 கோடி குடும்பப் பெண்களுக்கு இதுவரை 10 லட்சம் நிதி உதவி அளிக்கப்பட்டு வந்தது. தற்போது  அது 20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
  • வருங்கால வைப்பு நிதி காப்பீட்டுத் தொகையை(24%) அடுத்த 3 மாதத்திற்கு அரசே செலுத்தும். அதாவது நிறுவனம் தரப்பில் வழங்கப்படும் 12% தொகை, தொழிலாளர்கள் தரப்பில் இருந்து செலுத்தப்படும் 12% என மொத்தமாக 24% தொகையையும் அரசே செலுத்தும்.இதில் 100 பணியாளர்களுக்கு குறைவாக உள்ள நிறுவனங்கள் மற்றும் மாத வருமானம் ரூ. 15,000க்கு குறைவாக இருக்கும் பணியாளர்களுக்கும் இது பொருந்தும்.
  • அடுத்ததாக, பி.எப் கணக்கு வைத்திருக்கும் தொழிலாளர்கள் தங்கள் கணக்கில் உள்ள 75% தொகை அல்லது 3 மாத ஊதியம், இதில் எது குறைவாக உள்ளதோ அதை அவர்கள் எடுத்துக்கொள்ள முடியும்.
  • கட்டடத் தொழிலாளர்களுக்கான நல நிதியில் இருந்து (ரூ.31,000 கோடி உள்ளது) அவர்களுக்குத் தேவையான உதவித்தொகையை மாநில அரசே வழங்கலாம்.
  • இந்தியாவில் யாரும் பசியுடன் இருக்க கூடாது.அதன்படி  நாட்டில் 80 கோடி மக்களுக்கு தலா 5 கிலோ அரிசி மற்றும் 1 கிலோ பருப்பு அடுத்த 3 மாதங்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும், மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் என சுகாதாரத்துறையில் உள்ள அனைவத்து பணியாளர்களுக்கும் ரூ.50 லட்சம் வரையில் மருத்துவ காப்பீடு வழங்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Recent Posts

காலையில் சரிவு.. மதியம் ஏற்றம் .. 2வது முறையாக தங்கம் விலையில் மாற்றம்!

காலையில் சரிவு.. மதியம் ஏற்றம் .. 2வது முறையாக தங்கம் விலையில் மாற்றம்!

சென்னை : காலையில் குறைந்த தங்கத்தின் விலை மதியம் உயர்ந்துள்ளது. காலையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.360 குறைந்த நிலையில் 3…

7 minutes ago

பா.ஜ.க. தொடர்ந்து சட்ட ஒழுங்கு பிரச்சனையில் ஈடுபடுகின்றனர்! செல்வப் பெருந்தகை கண்டனம்!

சென்னை : மும்மொழி கொள்கை விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ள நிலையில்,   மூன்றாவது மொழி ஏதேனும் என குறிப்பிட்டு மத்திய…

1 hour ago

வெயிலுக்கு ஜில்..ஜில்.! மழை அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்!

சென்னை : தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி உள்ள நிலையில் வழக்கமாக ஏப்ரல், மே மாதங்களில் தான் வெயிலின் தாக்கம் அதிகமாக…

2 hours ago

விகடன் இணையதள தடை நீக்கம்! ஆனால்.? சென்னை உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு!

சென்னை : அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்களை அமெரிக்காவில் இருந்து அவர்கள் சொந்த…

2 hours ago

நீங்க அமெரிக்காவுக்குள் வரவே கூடாது! பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு டிரம்ப் வைத்த ‘செக்’?

வாஷிங்டன் :  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் விரைவில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதற்கு தடைவிதிக்க…

2 hours ago

“நான் என்ன தீவிரவாதியா?” சீரிய தமிழிசை! கைது செய்த போலீசார்!

சென்னை : மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கையின் படி பள்ளி குழந்தைகள் தாய் மொழி, ஆங்கிலம் தவிர்த்து…

3 hours ago