#BREAKING: பட்ஜெட் உரையை நிறைவு செய்த நிர்மலா சீதாராமன்..!

Default Image

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இன்று நிர்மலா சீதாராமன் 3-வது  முறையாக பட்ஜெட் தாக்கல் செய்தார். வழக்கமாக பட்ஜெட் தாள்கள் மூலம் தாக்கல் செய்யப்படும், ஆனால், இந்த முறை வித்தியாசமாக முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

காலை 11 மணிக்கு மத்திய பட்ஜெட் தாக்கல் செய்ய தொடங்கியபோது, நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்கள் தொடர்பாக எதிர்க்கட்சி அமளியில் ஈடுபட்டனர். இதைத்தொடர்ந்து, ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் பட்ஜெட் உரையை வாசிக்க நேரம் எடுத்துக் கொண்ட நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை நிறைவு செய்தார்.

நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை தொடர்ந்து மக்களவையை ஒத்திவைத்து சபாநாயர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்