வங்கி மோசடி மன்னன் நிரவ்மோடியின் காவல் நீட்டிப்பு -லண்டன் நீதிமன்றம் உத்தரவு

Published by
Venu
லண்டன் சிறையில் உள்ள நிரவ் மோடியின்  காவல் செப்டம்பர் 19 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000  கோடிக்கு மேல் கடன் வாங்கி  விட்டு  இந்தியாவை விட்டு வெளியேறி விட்டார் வைர வியாபாரி நிரவ் மோடி.இந்த மோசடி தொடர்பாக  நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. நிரவ் மோடியை கைது செய்து இந்தியாவிடம் ஒப்படைக்க சர்வதேச போலீசின் உதவியை மத்திய அரசு நாடியது.
அதன்படி நிரவ் மோடிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீசை சர்வதேச போலீசாரும் பிறப்பித்தனர். இந்த வழக்கில் இங்கிலாந்தில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றம் நிரவ் மோடியை கைது செய்ய  வாரண்ட் ஒன்றை பிறப்பித்தது.இதனை தொடர்ந்து லண்டன் போலீசார் நிரவ் மோடியை கைது செய்தது.அவர் லண்டனில் உள்ள வான்ஸ்ட்வார்த் (Wandsworth prison) சிறையில் உள்ளார்.

இந்த நிலையில் வெஸ்ட்மின்ஸ்டர் நீதிமன்றத்தில் சிறையில் இருந்தபடி வீடியோ கான்பரன்சிங் முறையில் நிரவ் மோடி ஆஜர்படுத்தப்பட்டார்.நிரவ் மோடியின் நீதிமன்ற காவலை,  செப்டம்பர் 19 ஆம் தேதி வரை நீட்டித்து நீதிபதி டன்வீர்  இக்ராம் ( judge Tanweer Ikram ) ஆணையிட்டார். மேலும்  நிரவ் மோடியை நாடு கடத்துவது குறித்த வழக்கின் விசாரணை 2020 ஆண்டு மே மாதம் 11-ஆம் தேதி தொடங்கும் என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார்.

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

1 hour ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

1 hour ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

1 hour ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

1 hour ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

2 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

2 hours ago