கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, இமாச்சல பிரதேச அரசு நேற்று மாநிலத்தின் நான்கு மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவை ஜனவரி 5 வரை நீட்டிக்க முடிவு செய்தது. இந்த நடவடிக்கை மாநில அமைச்சரவையால் மறுஆய்வுக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்டது.
ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்ட மாவட்டங்களில் சிம்லா, குலு, மண்டி மற்றும் காங்க்ரா ஆகியவை அடங்கும். கடந்த மாதம் மாநிலத்தில் கொரோனா வைரஸ் வழக்குகள் அதிகரித்ததால் நவம்பர் 23 அன்று இந்த மாவட்டங்களில் இரவு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இரவு ஊரடங்கு உத்தரவு இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை என டிசம்பர் 15 வரை விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தொற்றுநோயைக் கருத்தில் கொண்டு, 1 முதல் 4 வரையிலான வகுப்புகள் மற்றும் 6 மற்றும் 7 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாஸ் என அரசு தெரிவித்தது. இருப்பினும், 5, 8, 9 மற்றும் 11 வகுப்புகளுக்கான இறுதித் தேர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடத்தப்படும். மேலும், 10 மற்றும் 12 வகுப்புகளுக்கான தேர்வு பாடத்திட்டத்தில் 30 சதவீத குறைக்கப்பட்டு தேர்வு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் அதிகரித்து வருவதை தொடர்ந்து, அரசியல் பேரணிகள், பொது குறை தீர்க்கும் கூட்டங்கள் போன்றவற்றிக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. மேலும், 200 க்கும் மேற்பட்ட மக்கள் வெளியில் ஒன்றுகூட அனுமதி கொடுக்கவில்லை.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…