#BREAKING: நாளையிலிருந்து டெல்லியிலும் இரவு ஊரடங்கு அமல்..!

Default Image

நாளையிலிருந்து இரவு 11 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு என  டெல்லி அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,நாடு முழுவதும் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 422 ஆக அதிகரித்துள்ளதாகவும், ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 130 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.

இதனால், அனைத்து மாநில அரசுகளுக்கும் இரவு நேர ஊரடங்கு, பொதுமக்கள் கூட்டமாக கூட தடை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்நிலையில், டெல்லியில் வேகமாக அதிகரித்து வரும் கொரோனாவை கருத்தில் கொண்டு நாளை (டிசம்பர் 27) முதல் இரவு 11:00 மணி முதல் காலை 5:00 மணி வரை இரவு ஊரடங்கு பிறப்பிக்கப்படுகிறது என டெல்லி அரசு அறிவித்துள்ளது.

ஏற்கனவே, மத்தியப் பிரதேசம், உத்தரப்பிரதேசம், அசாம்  மற்றும் கர்நாடக உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்