இன்று முதல் 10 நாட்களுக்கு…50% மட்டுமே அனுமதி – அரசு அவசர அறிவிப்பு!

Published by
Edison

கர்நாடகா:இன்று முதல் 10 நாட்களுக்கு இரவு நேர(இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளதாக கர்நாடகா மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,நாடு முழுவதும் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 578 ஆக அதிகரித்துள்ளதாகவும்,ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 151 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று தகவல் தெரிவித்தது.

ஏற்கனவே,உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியது.மேலும்,இரவு நேர ஊரடங்கு,பொதுமக்கள் கூட்டமாக கூட தடை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்க அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையில்,கர்நாடகாவில் ஒமைக்ரான் தொற்றால் இதுவரை 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்,அதில் 15 பேர் குணமடைந்து விட்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.மேலும்,அச்சுறுத்தும் ஒமைக்ரான் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை,அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில்,ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இன்று (டிச.28 ஆம் தேதி) முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளதாக கர்நாடகா மாநில அரசு அறிவித்துள்ளது.

அதன்படி,இன்று முதல் 10 நாட்களுக்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,திரையரங்குகள்,உணவகங்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.திருமண நிகழ்ச்சிகளில் 300 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே,மத்தியப் பிரதேசம்,உத்திரப்பிரதேசம்,அசாம்,டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கேரளாவிலும் டிச.30 முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

“கொஞ்சம் சகித்து போயிருக்கலாம்”…மணிமேகலைக்கு அட்வைஸ் கொடுத்த ஷகிலா!

சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…

12 hours ago

பாஸ்போர்ட் அப்ளை செய்ய போறீங்களா.? அடுத்த 3 நாட்கள் முடியவே முடியாது.!

மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…

12 hours ago

INDvsBAN : “அவர் ரொம்ப உதவி பண்ணாரு”! சதம் விளாசிய பின் அஸ்வின் பேச்சு!

சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…

12 hours ago

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள்! தங்கலான் முதல் வாழ வரை!

சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…

13 hours ago

‘இட்லி கடை’ போட்ட தனுஷ்.! மீண்டும் கேங்ஸ்டர் படமா?

சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…

13 hours ago

INDvBAN : சம்பவம் செய்து வரும் அஸ்வின்-ஜடேஜா! வலுவான நிலையில் இந்தியா!

சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…

13 hours ago