இன்று முதல் 10 நாட்களுக்கு…50% மட்டுமே அனுமதி – அரசு அவசர அறிவிப்பு!

Published by
Edison

கர்நாடகா:இன்று முதல் 10 நாட்களுக்கு இரவு நேர(இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை) ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளதாக கர்நாடகா மாநில அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில்,நாடு முழுவதும் இதுவரை ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 578 ஆக அதிகரித்துள்ளதாகவும்,ஒமைக்ரான் பாதிப்பில் இருந்து இதுவரை 151 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நேற்று தகவல் தெரிவித்தது.

ஏற்கனவே,உள்ளூர் அளவில் கட்டுப்பாடுகள் விதிக்க அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்கியது.மேலும்,இரவு நேர ஊரடங்கு,பொதுமக்கள் கூட்டமாக கூட தடை போன்ற கட்டுப்பாடுகள் விதிக்க அறிவுறுத்தப்பட்டது.

இதற்கிடையில்,கர்நாடகாவில் ஒமைக்ரான் தொற்றால் இதுவரை 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும்,அதில் 15 பேர் குணமடைந்து விட்டதாகவும் மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.மேலும்,அச்சுறுத்தும் ஒமைக்ரான் தொற்று பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை,அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் நேற்று முன்தினம் ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில்,ஒமைக்ரான் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக இன்று (டிச.28 ஆம் தேதி) முதல் 10 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளதாக கர்நாடகா மாநில அரசு அறிவித்துள்ளது.

அதன்படி,இன்று முதல் 10 நாட்களுக்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,திரையரங்குகள்,உணவகங்களில் 50% பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.திருமண நிகழ்ச்சிகளில் 300 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே,மத்தியப் பிரதேசம்,உத்திரப்பிரதேசம்,அசாம்,டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. கேரளாவிலும் டிச.30 முதல் ஜனவரி 2 ஆம் தேதி வரை இரவு நேர ஊரடங்கு அமலுக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

கொரோனா கட்டுக்குள் இருக்கு…மக்கள் பயப்படவேண்டாம்! மத்திய அரசு விளக்கம்!

டெல்லி : கொரோனா வைரஸ் தொற்று உலகளவில் 2020 முதல் பரவி கொண்டு பெரும் அச்சத்தை ஏற்படுத்திக்கொண்டு வருகிறது. இதனால்…

21 minutes ago

LSG vs SRH : அதிரடி காட்டிய ஹைதராபாத்..,! பிளே ஆப்-பில் இருந்து வெளியேறிய லக்னோ.!

லக்னோ : ஐபிஎல் 2025 இன் 61வது போட்டி இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு…

7 hours ago

“இந்தியாவில் கட்டுக்குள் கொரோனா பாதிப்பு” – மத்திய அரசு விளக்கம்.!

டெல்லி : கொரோனா தொற்று மீண்டும் உலகம் முழுவதும், குறிப்பாக, தென்கிழக்காசியாவில் வேகமாக பரவுகிறது. கொரோனா வைரஸின் ஒமைக்ரான் வேரியன்ட்களில்…

7 hours ago

LSG vs SRH : பேட்டிங்கில் மிரட்டிய லக்னோ.., ஹைதராபாத்துக்கு இமாலய இலக்கு.!

லக்னோ : ஐபிஎல்லில் இன்றைய லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன. லக்னோ…

9 hours ago

”விஷாலுடன் ஆகஸ்டு 29 ஆம் தேதி திருமணம்” – மேடையில் அறிவித்த சாய் தன்ஷிகா.!

சென்னை : யோகி டா பட இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஆர்.வி.உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா…

10 hours ago

சாய் தன்ஷிகாவை கரம் பிடிக்கும் நடிகர் விஷால்.! மேடையில் போட்டுடைத்த இயக்குநர்.!

சென்னை : நடிகர் விஷால் நடிகை சாய் தன்ஷிகாவை ஆகஸ்ட் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது. விஷாலும்…

10 hours ago