கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ராஜஸ்தானில் டிசம்பர் முழுவதும் 13 மாவட்டங்களுக்கு இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதலே பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது வரையிலும் அமலில் உள்ளது. ஒவ்வொரு இடங்களிலும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அவ்வப்போது சில தளர்வுகளும் கொடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு அங்குள்ள அரசாங்கம் தற்போது புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ராஜஸ்தானின் 13 மாவட்ட தலைமையகங்கள் ஆன கோட்டா, ஜெய்ப்பூர் ஜோத்பூர், பிகானேர், உதய்பூர், ஆழ்வார், பில்வாரா, நாகூர், உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கும் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரையிலும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.
இது டிசம்பர் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையிலும் அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த இடங்களில் அனைத்து சந்தைகள் மற்றும் பணியிடங்கள் இரவு 7 மணிக்குள் மூடப்படும் எனவும் எனவே ஊழியர்கள் 8 மணிக்குள் வீடு திரும்பி விடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது. லாரிகள் மற்றும் பிற பொருட்களை ஏற்றிச் செல்லக்கூடிய வாகனங்களுக்கு இதன் மூலம் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச்…
ஜெய்ப்பூர் : நேற்றைய தினம் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள…
காஷ்மீர் : பஹல்காமில் 6 நாட்களுக்கு முன்பு நடந்த பயங்கரவாத தாக்குதலின் போது, எடுக்கப்பட்ட புதிய காணொளி ஒன்று வெளியாகியுள்ளது.…
டெல்லி : நடிகர் அஜித்குமாருக்கு பத்ம பூஷன் விருதை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார். நேற்றைய தினம் டெல்லியில்…
சென்னை : நேற்று முன் தினம் தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மனோ தங்கராஜ் மீண்டும் அமைச்சர் பொறுப்பு…
ஜெய்ப்பூர் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய்…