ராஜஸ்தானில் டிசம்பர் முழுவதும் 13 மாவட்டங்களுக்கு இரவு ஊரடங்கு!

Published by
Rebekal

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு ராஜஸ்தானில் டிசம்பர் முழுவதும் 13 மாவட்டங்களுக்கு இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா பரவல் காரணமாக இந்தியா முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதலே பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு தற்போது வரையிலும் அமலில் உள்ளது. ஒவ்வொரு இடங்களிலும் கொரோனா பரவலை கருத்தில் கொண்டு அவ்வப்போது சில தளர்வுகளும் கொடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இந்நிலையில் ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் பரவலை கருத்தில் கொண்டு அங்குள்ள அரசாங்கம் தற்போது புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ராஜஸ்தானின் 13 மாவட்ட தலைமையகங்கள் ஆன கோட்டா, ஜெய்ப்பூர் ஜோத்பூர், பிகானேர், உதய்பூர், ஆழ்வார், பில்வாரா, நாகூர், உள்ளிட்ட 13 மாவட்டங்களுக்கும் இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரையிலும் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது.

இது டிசம்பர் 1ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரையிலும் அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த இடங்களில் அனைத்து சந்தைகள் மற்றும் பணியிடங்கள் இரவு 7 மணிக்குள் மூடப்படும் எனவும் எனவே ஊழியர்கள் 8 மணிக்குள் வீடு திரும்பி விடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளது. லாரிகள் மற்றும் பிற பொருட்களை ஏற்றிச் செல்லக்கூடிய வாகனங்களுக்கு இதன் மூலம் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by
Rebekal

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

13 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

14 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

14 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

15 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

15 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

15 hours ago