தெலுங்கானாவில் இரவு நேர ஊரடங்கு மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு…! ட்ரான்களை பயன்படுத்தி கொரோனா தடுப்பூசி வழங்க அனுமதி….!

Published by
லீனா

தெலுங்கானாவில் இரவு நேர ஊரடங்கு மேலும் 7 நாட்கள் நீட்டிப்பு. 

இந்தியாவில் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், தெலுங்கானா மாநிலத்தில் வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் வைரஸ் பரவலை கட்டுப் படுத்தும் வண்ணம் கடந்த 20ஆம் தேதி முதல் தெலுங்கானாவில் இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அமல்படுத்தப்பட்டது. ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், அமலில் உள்ள ஊரடங்கு இன்றுடன் நிறைவடைய உள்ளது.

இதனையடுத்து, மேலும் 7 நாட்களுக்கு இரவு நேர ஊரடங்கு நீடிக்கப்படுவதாக தெலுங்கானா அரசு அறிவித்துள்ளது. அதன்படி மே 8ஆம் தேதி வரை தெலுங்கானாவில் இரவு நேர ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெலுங்கானாவில் நேற்று ஒரே நாளில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு தொற்று உறுதிசெய்யப்பட்ட நிலையில், 53 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அங்கு 4,35,606 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 2,261 பேர் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து அதிகரித்து வரும் தொற்றை கட்டுப்படுத்த அனைத்து மாநிலங்களிலும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில், ட்ரோன்களை பயன்படுத்தி  தடுப்பூசிகளை வழங்குவதற்கான அனுமதியை தெலுங்கானா அரசுக்கு, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் வழங்கியுள்ளது. இந்த அனுமதி ஒரு வருட காலத்திற்கு செல்லுபடி ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Published by
லீனா

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

12 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago