மகாராஷ்டிராவில் நாளை முதல் இரவு நேர ஊரடங்கு மீண்டும் அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது.
நாட்டில் கொரோனா தாக்கம் அதிகமாக இருக்கும்போது மிகவும் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா தான் இருந்தது. அம்மாநில அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் வந்துள்ளது. இதனிடையே, இங்கிலாந்தில் புதியவகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், இந்திய அரசு விமான சேவையை ரத்து செய்துள்ளது.
இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு விழா வருவதையொட்டி, கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனை கருத்தில் கொண்டு மகாராஷ்டிராவில் நாளை முதல் ஜன.5 வரை இரவு 11 மணி முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு அமலில் இருக்கும் என்று அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணிகள் 15 நாட்கள் கட்டாயமாக தனிமைப்படுத்தப்படுவர் என்றும் மகாராஷ்டிரா அரசு அறிவித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…