கேரள தங்கக் கடத்தல் வழக்கு: தலைமை செயலகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் ஆய்வு!

Published by
Surya

தங்கக்கடத்தல் வழக்கில், கேரளா தலைமை செயலகத்தில் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.

கேரளாவில் கடந்த சில தினங்களுக்கு முன், 15 கோடி ருபாய் மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட விவகாரத்தில் தொடர்புத் துறையில் மேலாளராக பணியாற்றும் ஸ்வப்னா சுரேஷூக்கு தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, தலைமறைவான ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயரை பெங்களூரில் கைது செய்து, கொச்சியில் என்.ஐ.ஏ. நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், இந்த தங்கக்கடத்தல் வழக்கில் கேரள முதல்வரின் முதன்மைச் செயலாளர் சிவசங்கரன் நெருங்கிய தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தநிலையில், தங்க கடத்தல் தொடர்பாக கேரளா தலைமை செயலகத்திற்கு சிவசங்கரனை சந்திப்பதற்காக சுவப்னா சுரேஷ் சென்றிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இதனையடுத்து என்.ஐ.ஏ. அதிகாரிகள், கேரள தலைமை செயலகத்தில் சோதனை நடத்த அனுமதி கோரியது. என்.ஐ.ஏ கோரிக்கையை ஏற்று, சோதனை நடத்த கேரள அரசு அனுமதி வழங்கியது. இந்நிலையில், தலைமை செயலகத்தில் உள்ள சி.சி.டி.வி. பதிவுகளையும், சில அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் வெளிநாடு பயணங்கள் தொடர்பான ஆவணங்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.

Published by
Surya

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

6 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

7 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

8 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

8 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

8 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

9 hours ago