இஸ்லாமிய மத பிரசாரகர், ஜாகிர் நாயக்கின், ‘பீஸ் டிவி’ செயலி மற்றும் அவரது, ‘யூ டியூப்’ சேனலுக்கு இந்தியாவில் தடை விதிப்பது தொடர்பாக, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இஸ்லாமிய மத பிரசாரகர் ஜாகிர் நாயக், தன் ‘பீஸ் டிவி’ மூலம், மத வெறுப்புணர்வை துாண்டும் செயலில் ஈடுபட்டு வந்ததால், இரு ஆண்டுகளுக்கு முன், அந்த, ‘டிவி’ ஒளிபரப்புக்கு இந்தியாவில் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில், ‘பீஸ் ஆப்’ என்ற மொபைல் போன் செயலி மூலம், மத வெறுப்புணர்வையும், இந்தியாவுக்கு எதிரான பிரசாரங்களையும், ஜாகிர் நாயக் மேற்கொண்டு வருவதை, புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்துள்ளது. இந்தியாவில் உள்ள அப்பாவி இஸ்லாமிய இளைஞர்களை மூளைச் சலவை செய்து, தாய் நாட்டிற்கு எதிராக திருப்பி விடும் நடவடிக்கையில், ஜாகிர் நாயக் ஈடுபட்டு வருவதாக, புலனாய்வு துறை, மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளித்துள்ளது. எனவே இந்த சேனல் மற்றும் செயலிக்கு தடை விதிக்க இந்திய அரசு பரிசீலித்து வருகிறது. அதேபோல், ஜாகிர் நாயக் மற்றும் அவரது நிறுவனங்களுக்கு, ஜிகாதி குழுக்களுடன் உள்ள தொடர்பும், இந்தியாவிற்கு எதிரான பிரசாரத்திற்கு ஆட்களை நியமிக்க, அரபு நாடுகளில் இருந்து கோடிக்கணக்கில் பணம் வருவது குறித்தும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதையடுத்து, என்.ஐ.ஏ அமைப்பு, ‘ஜாகிர் நாயக்கின் பீஸ் செயலி, யூ டியூப் வீடியோ ஆகியவற்றை தடை செய்ய வேண்டும்’ என, அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
ஜெய்ப்பூர் : ஐபிஎல் 2025-இன் 36-வது போட்டி இன்று ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது.…
ஜெய்ப்பூர் : இந்தியன் பிரீமியர் லீக் 2025 இன் 36வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள்…
கொச்சி : போதைப்பொருள் விவகாரத்தில் கேரளாவில் உள்ள எர்ணாகுளம் காவல் நிலையத்தில் ஆஜரான நடிகர் ஷைன் டாம் சாக்கோ கைது…
சென்னை : மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ இன்று அறிவித்துள்ளார். இந்த…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி அணியும், குஜராத் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில்…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், இன்று 2 முக்கிய போட்டிகள் நடைபெறுகிறது. GT vs…